'தேடப்படும் குற்றவாளி' நிழல் உலக தாதா டைகர் மேமனை சந்தித்தேன்: காங். எம்.எல்.ஏ. பேச்சால் சர்ச்சை
ஸ்ரீநகர்: மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கின் முக்கிய குற்றவாளியான நிழல் உலக தாதா டைகர் மேமனை தாம் சந்தித்ததாக பயங்கரவாத இயக்கத்தைவிட்டு வெளியேறி சரணடைந்தவரும் ஜம்மு காஷ்மீர் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான உஸ்மான் மஜீத் கூறியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்படுகிற குற்றவாளி டைகர் மேமன். இவரது சகோதரர் யாகூப் மேமன்தான் நேற்று முன்தினம் இந்த வழக்கில் தூக்கிலிடப்பட்டார்.

இந்த நிலையில் டைகர் மேமனை தாம் சந்தித்ததாக ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் எம்.எல்.ஏ. உஸ்மான் மஜீத் கூறியிருப்பது சர்ச்சையையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது. இது தொடர்பாக உஸ்மான் மஜீத் கூறியுள்ளதாவது:
மும்பை தொடர் குண்டுவெடிப்புகளுக்கு பிறகு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 1993ஆம் ஆண்டு டைகர் மேமனைச் சந்தித்தேன். முசாஃபராபாதில் இருந்த எங்களது அலுவலகத்துக்கு அவர் வருவார்.
டைகர் எனக்கு நண்பர் கிடையாது. மாணவர்கள் விடுதலை முன்னணி அமைப்பின் நிறுவனரும், அதன் தலைவருமான ஹிலால் பேக்தான் டைகர் மேமனை எனக்கு அறிமுகப்படுத்தினார்.
என்னுடன் பேசியபோது மும்பையில் தொடர் குண்டுவெடிப்புகளை தான் நிகழ்த்தியதாக டைகர் மேமனும் ஒப்புக் கொண்டார். அதற்கான காரணத்தை அவரிடம் கேட்டேன். அதற்கு அவர், பாபர் மசூதி இடிப்புச் சம்பவத்தையும், அதன்பிறகு மூண்ட கலவரத்தையும் முக்கிய காரணமாகத் தெரிவித்தார்.
மும்பையில் தொடர் குண்டுவெடிப்புகள் நிகழ்த்துவதற்கு டைகர் மேமனுக்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பு ஐ.எஸ்.ஐ.தான் அனைத்து உதவிகளையும் செய்தது. இந்தியாவிடம் தனது சகோதரர் யாகூப் மேமன் சரணடைந்த காரணத்தால், தன் மீது ஐ.எஸ்.ஐ. சந்தேகம் கொண்டிருப்பதாகவும், எனவே தன்னை ஐ.எஸ்.ஐ. கொலை செய்வதற்கு வாய்ப்பிருப்பதாகவும் டைகர் மேமன் என்னிடம் பேசும்போது கவலை தெரிவித்தார்.
இவ்வாறு உஸ்மான் மஜீத் கூறியுள்ளார்.
"குக்கா பாரே" என்ற பயங்கரவாத அமைப்பில் இருந்த உஸ்மான் மஜீத், மனம் திருந்தி மத்திய அரசிடம் சரணடைந்தார். இதையடுத்து ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற சட்டசபை தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.வாக மஜீத் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications