ஜார்க்கண்ட் சுரங்கத்தில் பெரும் விபத்து.. பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
ஜார்கண்டில் செயல்பட்டு வரும் நிலக்கரி சுரங்கம் நேற்று முன்தினம் திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 11 பேர் உயிரிழந்தனர்.
ராஞ்சி : ஜார்கண்டில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் திடீரென மண்சரிவு ஏற்பட்டு இடிந்து விழுந்தது. இதில் சுரங்கத்தில் பணிபுரிந்த 11 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
ஜார்கண்ட் மாநிலம் கோட்டா மாவட்டத்தில் செயல்பட்டு வரும் நிலக்கரி சுரங்கத்தில் நேற்று முன்தினம் 40 முதல் 50 தொழிலாளர்கள் வரை பணியில் ஈடுபட்டிருந்தனர். 70க்கும் மேற்பட்ட வாகனங்கள் சுரங்கத்துக்குள் நிறுத்தப்பட்டு நிலக்கரி நிரப்பப்பட்டது.
இந்நிலையில் இரவு 8.30 மணியளவில் திடீரென மண்சரிவு ஏற்பட்டது. இதில் சுரங்கத்தின் பெரும்பலான பகுதி இடிந்து விழுந்து மண்ணால் மூடப்பட்டது.
இதனால் சுரங்கத்தில் இருந்த தொழிலாளர்கள் வெளியே வர முடியாமல் உள்ளேயே சிக்கினர். இரவு நேரம் மற்றும் பனிப்பொழிவு காரணமாக மீட்புப் பணியில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று காலை மீண்டும் மீட்புப் பணி துரிதப்படுத்தப்பட்டது. சம்பவ இடத்துக்கு தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரும் விரைந்து சென்ற மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மீட்கப்படும் தொழிலாளர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல ஹெலிகாப்டர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. மருத்துவ குழுவும் அங்கு நிறுத்தப்பட்டிருந்தது.

தொழிலாளர்களை எப்படியாவது உயிரோடு மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் இதுவரை 11 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 2 பேர் காயங்களுடன் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
இதனால் மற்றவர்களின் கதி என்ன என்பதில் கேள்விக் குறியாகியுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி மீட்புப்பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாக கூறியுள்ளார்.
இதனிடையே உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாயும் காயமடைந்தவர்களுக்கு தலா 25000 ரூபாயும் வழங்கப்படும் என ஜார்கண்ட் மாநில அரசு தெரிவித்துள்ளது. மீட்பு பணிகள் இன்றும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications