ஜார்க்கண்ட் சுரங்கத்தில் பெரும் விபத்து.. பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
ஜார்கண்டில் செயல்பட்டு வரும் நிலக்கரி சுரங்கம் நேற்று முன்தினம் திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 11 பேர் உயிரிழந்தனர்.
ராஞ்சி : ஜார்கண்டில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் திடீரென மண்சரிவு ஏற்பட்டு இடிந்து விழுந்தது. இதில் சுரங்கத்தில் பணிபுரிந்த 11 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
ஜார்கண்ட் மாநிலம் கோட்டா மாவட்டத்தில் செயல்பட்டு வரும் நிலக்கரி சுரங்கத்தில் நேற்று முன்தினம் 40 முதல் 50 தொழிலாளர்கள் வரை பணியில் ஈடுபட்டிருந்தனர். 70க்கும் மேற்பட்ட வாகனங்கள் சுரங்கத்துக்குள் நிறுத்தப்பட்டு நிலக்கரி நிரப்பப்பட்டது.
இந்நிலையில் இரவு 8.30 மணியளவில் திடீரென மண்சரிவு ஏற்பட்டது. இதில் சுரங்கத்தின் பெரும்பலான பகுதி இடிந்து விழுந்து மண்ணால் மூடப்பட்டது.
இதனால் சுரங்கத்தில் இருந்த தொழிலாளர்கள் வெளியே வர முடியாமல் உள்ளேயே சிக்கினர். இரவு நேரம் மற்றும் பனிப்பொழிவு காரணமாக மீட்புப் பணியில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று காலை மீண்டும் மீட்புப் பணி துரிதப்படுத்தப்பட்டது. சம்பவ இடத்துக்கு தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரும் விரைந்து சென்ற மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மீட்கப்படும் தொழிலாளர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல ஹெலிகாப்டர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. மருத்துவ குழுவும் அங்கு நிறுத்தப்பட்டிருந்தது.

தொழிலாளர்களை எப்படியாவது உயிரோடு மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் இதுவரை 11 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 2 பேர் காயங்களுடன் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
இதனால் மற்றவர்களின் கதி என்ன என்பதில் கேள்விக் குறியாகியுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி மீட்புப்பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாக கூறியுள்ளார்.
இதனிடையே உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாயும் காயமடைந்தவர்களுக்கு தலா 25000 ரூபாயும் வழங்கப்படும் என ஜார்கண்ட் மாநில அரசு தெரிவித்துள்ளது. மீட்பு பணிகள் இன்றும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications