ஜார்க்கண்ட் சுரங்கத்தில் பெரும் விபத்து.. பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
ஜார்கண்டில் செயல்பட்டு வரும் நிலக்கரி சுரங்கம் நேற்று முன்தினம் திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 11 பேர் உயிரிழந்தனர்.
ராஞ்சி : ஜார்கண்டில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் திடீரென மண்சரிவு ஏற்பட்டு இடிந்து விழுந்தது. இதில் சுரங்கத்தில் பணிபுரிந்த 11 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
ஜார்கண்ட் மாநிலம் கோட்டா மாவட்டத்தில் செயல்பட்டு வரும் நிலக்கரி சுரங்கத்தில் நேற்று முன்தினம் 40 முதல் 50 தொழிலாளர்கள் வரை பணியில் ஈடுபட்டிருந்தனர். 70க்கும் மேற்பட்ட வாகனங்கள் சுரங்கத்துக்குள் நிறுத்தப்பட்டு நிலக்கரி நிரப்பப்பட்டது.
இந்நிலையில் இரவு 8.30 மணியளவில் திடீரென மண்சரிவு ஏற்பட்டது. இதில் சுரங்கத்தின் பெரும்பலான பகுதி இடிந்து விழுந்து மண்ணால் மூடப்பட்டது.
இதனால் சுரங்கத்தில் இருந்த தொழிலாளர்கள் வெளியே வர முடியாமல் உள்ளேயே சிக்கினர். இரவு நேரம் மற்றும் பனிப்பொழிவு காரணமாக மீட்புப் பணியில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று காலை மீண்டும் மீட்புப் பணி துரிதப்படுத்தப்பட்டது. சம்பவ இடத்துக்கு தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரும் விரைந்து சென்ற மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மீட்கப்படும் தொழிலாளர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல ஹெலிகாப்டர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. மருத்துவ குழுவும் அங்கு நிறுத்தப்பட்டிருந்தது.

தொழிலாளர்களை எப்படியாவது உயிரோடு மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் இதுவரை 11 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 2 பேர் காயங்களுடன் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
இதனால் மற்றவர்களின் கதி என்ன என்பதில் கேள்விக் குறியாகியுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி மீட்புப்பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாக கூறியுள்ளார்.
இதனிடையே உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாயும் காயமடைந்தவர்களுக்கு தலா 25000 ரூபாயும் வழங்கப்படும் என ஜார்கண்ட் மாநில அரசு தெரிவித்துள்ளது. மீட்பு பணிகள் இன்றும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications