பரப்பன அக்ரஹாரா சிறையில் பிசியாகத்தான் இருக்கிறார் சசிசகலா.. அமைச்சர் ரெட்டி திடீர் சந்திப்பு!
பெங்களூரு: பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் பிசியாகத்தான் இருக்கிறார் போல சசிகலா. கட்சிக்காரர்கள் பலரையும் அவர் சந்தித்துள்ளார்.
கட்சிக்காரர்கள் யாரையும் அவர் சந்திக்கவில்லை. கட்சிக்காரர்கள் யாரும் அவரை சந்திப்பதில்லை என்று கூறப்பட்டாலும் கூட அவ்வப்போது சில பல முக்கியஸ்தர்கள் சந்தித்தவாறுதான் உள்ளனர்.

இன்று கூட சசிகலாவை தமிழக கால்நடைத்துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி சந்தித்துப் பேசியுள்ளார். ரெட்டி சசிகலாவை சிறையில் சந்திப்பது இதுதான் முதல் முறை என்று கூறப்படுகிறது. ரெட்டி ஓசூரைச் சேர்ந்தவர். சட்டசபையில் தெலுங்கிலேயே பேசி பிரபலமானவர்.
இவரது உறவினர் ஒருவர் பெங்களூரில் ஏடாகூடமான கேஸில் சிக்கி கைதானவர். இந்த நிலையில் ரெட்டி, சசிகலாவைச் சந்தித்தது ஏன் என்ற கேள்விகள் எழுந்துள்ளன. பெங்களூரில் செல்வாக்கு உடையவர் இந்த ரெட்டி. எனவே சசிகலாவுக்கு சாதகமான வேலைகளை அவர் பெங்களூரில் முகாமிட்டு செய்து கொடுப்பதாகவும் பேச்சு உள்ளது.
ரெட்டி தவிர எம்.எல்.ஏ.க்கள் வெற்றிவேல், தங்கதமிழ்ச்செல்வன், முன்னாள் அமைச்சர் ரமணா, முன்னாள் எம்.எல்.ஏ. மொளச்சூர் பெருமாளும் சசிகலாவை சந்தித்து பேசியுள்ளனர்.
மொத்தத்தில் சசிசகலா, சிறையில் பிசியாகத்தான் இருக்கிறார் போலும்.












Click it and Unblock the Notifications