உ.பி.யில் அமைச்சர் கார் மோதி 5 வயது சிறுவன் பலி.. காரை நிறுத்தாமலே சென்ற கொடுமை
உத்திரபிரதேசத்தில் அமைச்சரின் கார் மோதியதில் சிறுவன் பலியான சம்பவத்தை விசாரிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
லக்னோ : உத்திரபிரதேசத்தில் அமைச்சரின் கார் மோதியதில் ஐந்து வயது சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் மேல் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார் முதல்வர் யோகி ஆதித்யநாத்.
உத்திரபிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தில் நேற்று சாலையில் ஓரத்தில் நடந்து சென்ற சிறுவன் மீது மோதியதில் அந்த சிறுவன் சம்பவ இடத்திலேயே பலியானான். ஆனால், மோதிய அமைச்சரின் கார் நிற்காமல் சென்றுவிட்டது. இது அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அரசு விழாவிற்கு சென்றுவிட்டு திரும்பிக்கொண்டிருந்தார் அமைச்சர் ஓம் பிரகாஷ் ராஜ்பார். அவரின் கார் சாலையில் நடந்து சென்ற ஐந்து வயது சிறுவன் சிவா மீது மோதியது. ஆனால் காலை நிறுத்தி அமைச்சர் சிறுவனின் நிலை குறித்து பார்க்கவில்லை. இதைக் கண்டித்து சிறுவனின் உடலோடு அந்தப் பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்த முதல்வர் யோகி ஆதித்யநாத், அந்த குடும்பத்திற்கு ஐந்து லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கவும், இந்த விபத்து குறித்து மேல் விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications