புதிதாக திருமணமான பெண் இரு நபர்களால் பலாத்காரம்
ராஜமுந்திரி: சிறுமி மற்றும் புதிதாக திருமணமான பெண் ஆகியோர் பாலியல் பலாத்காரத்துக்கு உற்படுத்தப்பட்ட சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜமுந்திரி பகுதியிலுள்ள தொரேடு கிராமத்தில் தோட்ட வேலை செய்யும் 10 வயது சிறுமி சம்பவத்தன்று கடையில் தயிர் வாங்கிக்கொண்டு வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தபோது, வேணு என்ற 25 வயது இளைஞரால் பலாத்காரம் செய்யப்பட்டார். சைக்கிளில் தூக்கி வைத்து ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கு கொண்டு சென்று சிறுமியை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
வீட்டுக்கு வந்த சிறுமி நடந்த சம்பவத்தை கூறி அழுதுள்ளார். இதையடுத்து, அவரது பெற்றோர், ராஜநகரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
மற்றொரு சம்பவத்தில் புதிதாக திருமணமான பெண் ஆட்டோ டிரைவர் மற்றும் அவரது நண்பரால் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். ராஜநகரம் காவல் நிலைய பகுதியில் உள்ள லாலா சேர்வு பகுதியை சேர்ந்த பெண் இந்த கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டவராகும்.
இவருக்கு சமீபத்தில்தான் திருமணமானது. கணவனுடன் ஏற்பட்ட தகராறால் இன்று அதிகாலையில் வீட்டைவிட்டு கிளம்பி, உள்ளூர் ரயில் நிலையத்துக்கு வந்துள்ளார். அங்குள்ள ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோவை வாடகைக்கு அமர்த்தி தனது தாய் வீட்டுக்கு போகும்படி கூறியுள்ளார்.
குடிபோதையில் இருந்த ஆட்டோ டிரைவர் ஆளில்லா இடத்துக்கு அழைத்துச் சென்று தனது நண்பன் ஒருவருடன் சேர்ந்து இப்பெண்ணை கூட்டு வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளார். இரு சம்பவங்களுமே ஆந்திராவின் ஒரே காவல் நிலைய எல்லையில் நடந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications