மேற்கு வங்கத்தில் பதற்றம்.. காவல் நிலையத்துக்கு தீவைப்பு.. சிறுமி பலாத்கார கொலையால் தொடர் வன்முறை
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் 10ம் வகுப்பு படித்த மாணவி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டதாக கூறி தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில் இன்று போராட்டக்காரர்கள் மீது தடியடி மற்றும் கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்ட நிலையில் வன்முறை வெடித்தது. இதில் காவல் நிலையம் தீவைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக மம்தா பானர்ஜி உள்ளார். இந்நிலையில் தான் வடக்கு தினஜ்பூரில் உள்ள கலியாகஞ்ச் பகுதியை சேர்ந்தவர் 10ம் வகுப்பு மாணவி. இவர் பட்டியலினத்தை சேர்ந்தவர்.

கடந்த வியாழக்கிழமை மாணவி டியூசனுக்கு சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து குடும்பத்தினர் தேடிப்பார்த்தனர். இரவில் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இந்நிலையில் மறுநாள் காலையில் சிறுமி கால்வாய் ஒன்றில் சடலமாக மீட்கப்பட்டார்.
இந்த மாணவி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்திருப்பதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டினர். மேலும் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தினர். ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதற்கிடையே இறந்த மாணவியின் உடலை போலீசார் தரையில் இழுத்து சென்றதாக வீடியோ வெளியானது.

இதையடுத்து குடும்பத்தினர் கடும் கோபமடைந்தனர். தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்த போராட்டம் வன்முறையாக மாறியது. அதாவது இன்று காலையில் எஸ்பி அலுவலகத்தின் அருகே மாணவியின் குடும்பத்தினர் நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. போலீசாருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதையடுத்து போலீசார் போராட்டக்காரர்களை கலைந்து செல்லும்படி கூறினார். ஆனால் அவர்கள் கேட்காமல் தொடர்ந்து கோஷமிட்டனர்.
இதையடுத்து போலீசார் தடியடி நடத்தினர். இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் கண்ணீர் புகை குண்டுகளை வீசி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக கலியாகஞ்ச் போலீஸ் நிலையத்துக்கு இன்று மாலையில் சென்ற சிலர் அங்கு தீவைத்துவிட்டு சென்றனர். இதில் போலீஸ் நிலையம் தீப்பற்றி எரிந்தது. இதனால் அங்கு தொடர்ந்து பதற்றம் ஏற்பட்டுள்ளது.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications