மேற்கு வங்கத்தில் பதற்றம்.. காவல் நிலையத்துக்கு தீவைப்பு.. சிறுமி பலாத்கார கொலையால் தொடர் வன்முறை
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் 10ம் வகுப்பு படித்த மாணவி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டதாக கூறி தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில் இன்று போராட்டக்காரர்கள் மீது தடியடி மற்றும் கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்ட நிலையில் வன்முறை வெடித்தது. இதில் காவல் நிலையம் தீவைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக மம்தா பானர்ஜி உள்ளார். இந்நிலையில் தான் வடக்கு தினஜ்பூரில் உள்ள கலியாகஞ்ச் பகுதியை சேர்ந்தவர் 10ம் வகுப்பு மாணவி. இவர் பட்டியலினத்தை சேர்ந்தவர்.

கடந்த வியாழக்கிழமை மாணவி டியூசனுக்கு சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து குடும்பத்தினர் தேடிப்பார்த்தனர். இரவில் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இந்நிலையில் மறுநாள் காலையில் சிறுமி கால்வாய் ஒன்றில் சடலமாக மீட்கப்பட்டார்.
இந்த மாணவி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்திருப்பதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டினர். மேலும் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தினர். ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதற்கிடையே இறந்த மாணவியின் உடலை போலீசார் தரையில் இழுத்து சென்றதாக வீடியோ வெளியானது.

இதையடுத்து குடும்பத்தினர் கடும் கோபமடைந்தனர். தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்த போராட்டம் வன்முறையாக மாறியது. அதாவது இன்று காலையில் எஸ்பி அலுவலகத்தின் அருகே மாணவியின் குடும்பத்தினர் நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. போலீசாருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதையடுத்து போலீசார் போராட்டக்காரர்களை கலைந்து செல்லும்படி கூறினார். ஆனால் அவர்கள் கேட்காமல் தொடர்ந்து கோஷமிட்டனர்.
இதையடுத்து போலீசார் தடியடி நடத்தினர். இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் கண்ணீர் புகை குண்டுகளை வீசி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக கலியாகஞ்ச் போலீஸ் நிலையத்துக்கு இன்று மாலையில் சென்ற சிலர் அங்கு தீவைத்துவிட்டு சென்றனர். இதில் போலீஸ் நிலையம் தீப்பற்றி எரிந்தது. இதனால் அங்கு தொடர்ந்து பதற்றம் ஏற்பட்டுள்ளது.
-
மம்தாவுக்கு மரண அடி.. உடையும் திரிணாமுல் காங்கிரஸ்? தீதீ-ஐ விட்டு செல்லும் 59 எம்எல்ஏக்கள் -
மம்தாவுக்கு புது பிரச்சனை.. இரண்டாக உடையும் திரிணாமுல் காங்கிரஸ்! யார் அந்த கருப்பு ஆடு? -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications