ம.பி.யில் 10 வயது சிறுமியை பலாத்காரம் செய்த தியான குரு

Subscribe to Oneindia Tamil

போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் தியான குரு ஒருவர் 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

மத்திய பிரதேச மாநிலம் பாலகாட் மாவட்டம் கோட்வாலியைச் சேர்ந்த 10 வயது சிறுமி தியான வகுப்புகளுக்கு சென்று வந்துள்ளார். அவர் கடந்த ஜூலை மாதம் 18ம் தேதி சரஸ்வதி நகரில் நடக்கும் தியான வகுப்புகளுக்கு சென்றுள்ளார்.

Minor girl raped by meditation teacher in MP

அவரை தியான குரு மகேஷ் கோவர்னே(33) வகுப்பில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து சிறுமி பயத்தில் யாரிடமும் தெரிவிக்காமல் இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அவர் டிவி பார்த்துள்ளார்.

டிவி நிகழ்ச்சியில் பாலியல் பலாத்கார சம்பவ செய்தியை பார்த்த சிறுமி கதறி அழுதுள்ளார். அப்போது தான் அவர் தான் பலாத்காரம் செய்யப்பட்டதை பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். உடனே அவர்கள் கோட்வாலி காவல் நிலையத்தில் மகேஷ் மீது புகார் அளித்தனர்.

அவர்களின் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மகேஷை கைது செய்தனர். அவர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+