வரி கட்டிட்டு எடுத்துட்டு போங்க: மிஸ் ஆசியா பசிபிக் அழகியின் மகுடம் மும்பை ஏர்போர்ட்டில் பறிமுதல்
Subscribe to Oneindia Tamil

கொரியாவில் நடந்த மிஸ் ஆசியா பசிபிக் அழகிப் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த ஷ்ரிஷ்டி ராணா(21) பட்டத்தை வென்றார். அவருக்கு வைர கற்கள் பதிக்கப்பட்ட மகுடம் சூட்டப்பட்டது. அவர் கொரியாவில் இருந்து கிளம்பி மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கினார்.
ராணா தன்னுடைய மகுடத்திற்கு சுங்க வரி செலுத்தவில்லை என்று கூறி அதிகாரிகள் அந்த மகுடத்தை பறிமுதல் செய்துள்ளனர். இது போன்ற பரிசுகளுக்கு வரி விலக்கு பெற மத்திய கலால் மற்றும் சுங்க வரி ஆணையத்திடம் இருந்து அனுமதி பெற வேண்டும்.
ராணா விவகாரத்தில் வரி விலக்கு அளிக்குமாறு மத்திய கலால் மற்றும் சுங்க வரி ஆணையம் தங்களுக்கு தெரிவிக்காததால் மகுடம் பறிமுதல் செய்யப்பட்டது என்று சுங்கத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications