குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு-தேவைப்பட்டால் அஸ்ஸாம் பாஜக அரசுக்கான ஆதரவு வாபஸ்-அஸ்ஸாம் கன பரிஷத்
குவஹாத்தி: மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு ஆதரவு அளித்தது தவறு என்றும் அஸ்ஸாமில் தேவைப்பட்டால் பாஜக அரசுக்கான ஆதரவை திரும்பப் பெறுவோம் என்றும் அஸ்ஸாம் கன பரிஷத் தலைவரும் முன்னாள் முதல்வருமான பிரஃபுல்ல குமார் மகந்தா தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை அஸ்ஸாம் கன பரிஷத் ஆதரித்தது. இதற்கு அஸ்ஸாமில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

அஸ்ஸாம் கன பரிஷத் தொண்டர்களே கட்சி தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மேலும் அஸ்ஸாம் பாஜக அரசில் உள்ள 3 அமைச்சர்களையும் வாபஸ் பெறவும் அவர்கள் வலியுறுத்தினர்.
இந்நிலையில் ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அஸ்ஸாம் கன பரிஷத்தின் தலைவரும் முன்னாள் முதல்வருமான பிரஃபுல்ல குமார் மகந்த அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
2015-ம் ஆண்டு முதலே குடியுரிமை சட்ட திருத்தத்தை நாங்கள் எதிர்த்து வருகிறோம். கட்சியின் சில தலைவர்கள்தான் இந்த சட்ட திருத்தத்தை ஆதரிக்கின்றனர்.
தேவைப்பட்டால் அஸ்ஸாமில் பாஜக அரசுக்கான ஆதரவை வாபஸ் பெறுவோம். குடியுரிமை சட்ட திருத்தம் என்பது அஸ்ஸாம் மக்களுக்கு எதிரானது. அதனால் உச்சநீதிமன்றத்துக்கு சென்றுள்ளோம்.
மேலும் இச்சட்ட திருத்தத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்படும் மனுக்களுக்கும் நாங்கள் ஆதரவை தெரிவிக்கிறோம். தற்போதைய பிரச்சனைக்கு மத்திய அரசு தீர்வு காண முயற்சிக்க வேண்டும். துப்பாக்கிச் சூடுகள் மூலம் அஸ்ஸாம் மக்களின் குரலை ஒடுக்க முடியாது.
இணைய சேவைகளை துண்டிப்பதன் மூலம் தற்போதைய பிரச்சனைக்கு தீர்வு காண முடியாது. இந்தியா என்பது மதச்சார்பற்ற நாடு. அரசியல் சாசனத்துக்கும் சட்டத்துக்கும் மேலானவர்கள் யாரும் இங்கே இல்லை. நாட்டின் அரசியல் சாசனம் உருவாக்கப்படும் போதே இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்றே எழுதப்பட்டுள்ளது.
இவ்வாறு பிரஃபுல்ல குமார் மகந்தா கூறினார்.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications