மத்திய அரசின் விவேக நடவடிக்கையால் குறைந்த விலையில் தொடர்ந்து கிடைக்கும் மின்சாரம்!
மத்திய அரசின் விவேகமான செயல்பாடுகளால் மக்களுக்கு மின்சாரம் குறைந்த விலையில் தொடர்ந்து கிடைத்து வருகிறது.
டெல்லி: மத்திய அரசின் 3 ஆண்டுகால ஆக்கப்பூர்வமான நடவடிக்கையால் மக்களுக்கு குறைந்தவிலையில் மின்சாரம் கிடைக்கும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பிரதமராக மோடி பதவியேற்றபோது அனைவருக்கும் மின்சாரம் கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். தொலைதூர கிராமங்களில் சூரிய மின்சக்தி போன்றவற்றின் மூலம் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.

மின்கட்டணம் குறைவு
மத்திய அரசின் தொடர்ச்சியான நடவடிக்கைகளால் பல மாநிலங்களில் மின்கட்டணம் என்பது குறைக்கப்பட்டுள்ளது. அண்மையில் சண்டிகரில் அனைத்து மின்கட்டணங்களுமே கணிசமாக குறைக்கப்பட்டது. வீடுகளுக்கான மின் கட்டணம் என்பது முதல் 150 யூனிட்டுகளுக்கு ஒரு யூனிட்டுக்கு 80 பைசா வசூலிக்கப்பட்டது. இது 65 பைசாவாக குறைக்கப்பட்டுள்ளது.

எவ்வளவு குறைவு?
இதற்கு அடுத்ததாக 400 யூனிட்டுகள் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ1.48 கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதுவும் ஒரு யூனிட்டுக்கு ரூ1.21 என குறைக்கப்பட்டுள்ளது. 400 யூனிட்டுகளுக்கு மேல் ஒரு யூனிட்டுக்கு வசூலிக்கப்பட்ட ரூ1.56 என்பது ரூ1.28 ஆக குறைக்கப்பட்டது. இதேபோல் அருணாச்சல், குஜராத், ஹரியானா, ஜார்க்கண்ட், ராஜஸ்தான் மாநிலங்காளில் மின்கட்டணம் உயர்த்தப்படவே இல்லை.

சக்தி திட்டம்
இந்த மாதம் மத்திய அரசானது மின் உற்பத்திக்கான நிலக்கரி கொள்முதலை சக்தி திட்டத்தின் மூலம் ஒழுங்குபடுத்தியுள்ளது. 2013-14 ஆம் ஆண்டு காலத்தில் 1 கிலோ வாட் மின்சாரத்துக்கு 0.69 கிலோ நிலக்கரி பயன்படுத்தப்பட்டது. 2016-17ல் 1 கிலோ வாட் மின்சாரம் உற்பத்தி செய்ய 0.63 கிலோ நிலக்கரிதான் பயன்படுத்தப்படுகிறது. அதாவது 1 யூனிட் மின்சாரம் தயாரிப்பதற்கான நிலக்கரியின் தேவை என்பது 3 ஆண்டுகளில் 8% ஆக குறைக்கப்பட்டுள்ளது.

அந்த நிலைமை இல்லை
2012-ம் ஆண்டு நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகள் 2 நாட்கள் கூட மின்சாரம் இல்லாமல் பல கோடி மக்கள் அவதிப்பட்ட நிலைமை இருந்தது. தற்போது 2011-12ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் குறைந்த விலையில் இந்த மாநிலங்களில் மின்சாரம் கிடைத்து வருகிறது.

கட்டணம் குறைப்பு
சூரிய சக்தி மற்றும் காற்றாலைகள் மூலமான மின்சாரம் பெறுவதற்கும் மிகக் குறைவான கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. 2014-ம் ஆண்டு மார்ச்சில் இருந்து தென்னிந்திய மாநிலங்களுக்கு 116% அளவுக்கு மின்சாரம் கொண்டுசெல்லப்பட்டிருக்கிறது.

உஜாலா, உதய் திட்டங்கள்
மத்திய அரசின் உஜாலா திட்டத்தின் கீழ் 23 கோடி எல்இடி பல்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ஆண்டுக்கு ரூ12,000 கோடி அளவுக்கு மின்சாரம் சேமிக்கப்பட்டிருக்கிறது. மத்திய அரசின் தொடர்ச்சியான நடவடிக்கைகளால் முந்தைய ஐக்கிய முன்னணி அரசாங்கத்தி 2004-14ம் ஆண்டு காலத்தைவிட மின்கட்டம் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் உதய் மின் திட்டம் மூலமாக மின்சாரம் சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டு வருகிறது. இதனால் நாட்டின் பொருளாதாரம் மேம்பாடு அடைந்துள்ளது.
-
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
ஜெயலலிதா இருந்தா இப்படி நடக்குமா? மொத்தமாக கண்ட்ரோலை எடுத்த பாஜக..லிஸ்டோடு டெல்லிக்கு ஓடிய எடப்பாடி! -
ஆந்திர மாடல்.. விஜயை வைத்து பாஜக போட்ட பலே ப்ளான்! எண்ட் கார்டு போட்ட பனையூர்! அவ்வளவு தானா? -
விஜய்யை என்டிஏ கூட்டணிக்கு அழைத்த பாஜக நிர்வாகியின் பதவி பறிப்பு.. நயினார் நாகேந்திரன் அதிரடி -
காங்கிரஸை விட கூடுதல் தொகுதிகள் வேண்டும்.. அதிமுகவிடம் மல்லுக்கட்டும் பாஜக.. எவ்வளவு சீட் தெரியுமா? -
நிதிஷ் குமாரின் நிலை எடப்பாடிக்கும் வருமா.. ஸ்டாலின் கவலைப்பட தேவையில்லை.. நயினார் நாகேந்திரன் பதில் -
மாஸ் வைத்து ஜெயிக்க முடியாதுங்க.. அண்ணாமலையை சீண்டிய குஷ்பு.. பாஜகவில் வெடித்த மோதல் -
ONOE: "ஒரே நாடு ஒரே தேர்தல்.. நோயை விடக் கொடிய மருந்து" - முதல்வர் ஸ்டாலின் கடும் எதிர்ப்பு! -
கச்சா எண்ணெய் விலை பேரல் 100 டாலர் தாண்டாத வரை.. பெட்ரோல், டீசல் விலை உயராது.. மத்திய அரசு விளக்கம்! -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான்












Click it and Unblock the Notifications