மோடியின் ஜப்பான் பயணத்தால் தெற்காசியாவில் புதிய சகாப்தம்: சர்வதேச ஊடகங்கள்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் ஜப்பான் பயனத்தின் மூலமாக தெற்காசியாவில் புதிய சகாப்தம் உருவாகியிருப்பதாக சர்வதேச ஊடகங்கள் பாராட்டியுள்ளன.

பிரதமர் நரேந்திர மோடி 5 நாள் பயணமாக ஜப்பானுக்கு சென்றிருந்தார். அந்நாட்டுடன் பல்வேறு துறை ஓப்பந்தங்களும் கையெழுத்திடப்பட்டுள்ளன.

Modi-Abe friendship: Here is how foreign media see it

2-ம் உலகப் போருக்கு பின்னர் முதல் முறையாக இந்தியாவுக்கு ராணுவ தளவாடங்களை வழங்குவதற்கும் ஜப்பான் முன்வந்துள்ளது.

இந்த பயணம் பற்றி டெய்லி மெய்ல் ஊடகம் எழுதியிருப்பதாவது:

  • தென்னாசியப் பிராந்தியத்தில் சர்வதேச உறவுகளில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ளது.
  • இருநாடுகளும் நீண்டகாலம் எதிர்கொண்டிருக்கும் சவால்களையும் பிராந்திய பாதுகாப்பையும் இருநாடுகளும் இணைந்து எதிர்கொள்வதற்கான சூழ்நிலை உருவாகியுள்ளது

ப்ளூம்பெர்க் ஊடகம் எழுதியுள்ளதாவது:

  • குஜராத் கலவரத்துக்குப் பின்னர் அமெரிக்கா, மோடிக்கு விசா வழங்க மறுத்துவந்தது.
  • இங்கிலாந்தும் கூட குஜராத் முதல்வராக இருந்த மோடியை சந்திக்காமல் இருந்து வந்தது.
  • தற்போது மோடியின் ஜப்பான் பயணம் என்பது 'கிழக்குநாடுகளை' நோக்கிய நட்புக்கரமாக கருதப்படுகிறது.

குவார்ட்ஸ் ஊடகத்தில் எழுதியிருப்பதாவது:

  • சீனாஜப்பான் இடையேயான உறவு சீர்குலைந்த நிலையில் இந்தியாவுடனான நல்லுறவு ஜப்பானுக்கு சாதகமானது.
  • இருப்பினும் புவிசார் அரசியல் நலன்கள் என்பது மோடியின் பயணத்தின் நோக்கமாக இல்லை
  • புவிசார் வர்த்தகம் மற்றும் முதலீடு என்பதுதான் மோடியின் பயணத்தின் இலக்காக இருந்தது.

வால்ஸ்ட்ரீட் ஜேர்னல்:

  • இந்தியாவை பொருளாதாரத்தில் வலுவாக கட்டமைக்க வேண்டிய நெருக்கடியில் இருக்கும் மோடி வலுவான நல்லுறவை ஜப்பான் பிரதமருடன் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்.
  • மோடியின் 5 நாள் பயணத்தின் மூலமாக ஜப்பான் முதலீடுகளை இந்தியா ஈர்த்துள்ளது.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+