காந்திநகர் தொகுதி அத்வானிக்குக் கிடைப்பது சந்தேகமே? மோடி குறி வைக்கிறார்..
டெல்லி: குஜராத்தின் காந்திநகர் தொகுதியை பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்காக விட்டுக் கொடுக்க முடியாது என்று பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி பிடிவாதம் பிடித்து வருகிறார்.
பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி லோக்சபா தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்திருக்கிறார். உத்தரப்பிரதேசத்தின் வாரணசாமி மற்றும் குஜராத்தின் காந்திநகர் தொகுதிகளில் அவர் போட்டியிட விரும்புகிறார்.

ஆனால் இந்த இரு தொகுதிகளிலுமே எம்.பி.யாக இருப்பவர்கள் பாரதிய ஜனதாவின் மூத்த தலைவர்கள். வாரணாசி தொகுதி எம்.பியாக இருப்பவர் முரளி மனோகர் ஜோஷி. காந்திநகர் தொகுதி எம்.பி. அத்வானி.
ஏற்கெனவே வாரணாசி தொகுதியை விட்டுக் கொடுக்க முடியாது என்று முரளி மனோகர் ஜோஷி கூறிவிட்டார். ஆனால் மோடி விடுவதாக இல்லை. இப்போது அத்வானி தாம் காந்திநகர் தொகுதியிலேயே மீண்டும் போட்டியிடப் போவதாக கட்சித் தலைமையிடம் தெரிவித்துள்ளார்.
காந்திநகர் தொகுதியில் இருந்து 1991,98,99,2004,2009 ஆகிய 5 முறை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் அத்வானி. 1996ஆம் ஆண்டு காந்திநகர் தொகுதியில் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார் முன்னாள் பிரதமர் வாஜ்பாய்.
இதனால் தாம் காந்திநகர் தொகுதியைவிட்டு கொடுக்க முடியாது என்பதுடன் மற்றொரு வாதத்தையும் அத்வானி முன்வைக்கிறார். பாகிஸ்தான் பிரிவினையின் போது கட்ச் பகுதிக்குத்தான் தமது குடும்பத்தினர் குடியேறி வாழ்ந்தனர். அங்கு தாம் போட்டியிட விரும்பினாலும் அது ரிசர்வ் தொகுதியாக இருப்பதால்தான் காந்திநகரில் போட்டியிட விரும்புகிறேன் என்கிறார்.
ஏற்கெனவே பாரதிய ஜனதாவின் தேர்தல் பிரசார குழு தலைவராக மோடி நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சி பதவிகளை ராஜினாமா செய்து கலகக் குரல் எழுப்பியவர்தான் அத்வானி. இப்போது தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் மீண்டும் கலகக் குரலை எழுப்புவாரோ என்று பதைபதைக்கின்றனர் பாஜகவினர்.
-
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி












Click it and Unblock the Notifications