பாகிஸ்தான் பல்கலைக்கழகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல்: மோடி கடும் கண்டனம்
டெல்லி: பாகிஸ்தானில் பல்கலைகழகத்தில் நுழைந்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளதற்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
பாகிஸ்தானின் பச்சாகான் பல்கலைக்கழகத்தில் தீவிரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் 21 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இத் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
Strongly condemn the terror attack at Bacha Khan University in Pakistan. Condolences to families of the deceased. Prayers with the injured.
— Narendra Modi (@narendramodi) January 20, 2016 இது குறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மோடி, பாகிஸ்தானின் பச்சாகான் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கின்றேன்.தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் குணம் அடையை பிரார்த்திக்கிறேன் எனக் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications