சிட்னி தீவிரவாத முற்றுகைக்கு நரேந்திர மோடி கண்டனம்
டெல்லி: சிட்னியில் ஒரு ஹோட்டலை தீவிரவாதிகள் பிடித்து வைத்துக் கொண்டுள்ள செயலுக்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.
The incident in Sydney is disturbing. Such acts are inhuman & deeply unfortunate. I pray for everyone's safety.
— Narendra Modi (@narendramodi) December 15, 2014 சிட்னி மார்ட்டின் பிளேஸ் பகுதியில் உள்ள லின்ட் சாக்கலேட் கேஃப் என்ற ஹோட்டலுக்குள் தீவிரவாதிகள் புகுந்துள்ளனர். அங்கிருந்த 13 பேரை சிறைப்பிடித்துள்ளனர். மேலும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கொடி என சந்தேகிக்கப்படும் கொடியையும் பறக்க விட்டுள்ளனர்.
இதனால் ஆஸ்திரேலியாவில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த சம்பவத்திற்குப் பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள டிவிட்டர் செய்தியில், இது கவலை தருகிறது. இதுபோன்ற சம்பவங்கள் மனிதத்தன்மையற்றவை, துரதிர்ஷ்டவசமானவை. அனைவரின் பாதுகாப்புக்காகவும் நான் பிரார்த்திக்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications