மூளையில்லா வன்முறையால் ஒரு உயிர் போய்விட்டது: ராகவேந்திரன் பற்றி மோடி ட்வீட்
டெல்லி: பிரஸ்ஸல்ஸில் பலியான ராகவேந்திரன் கணேசனின் குடும்பத்தாருக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் உள்ள மால்பீக் மெட்ரோ ரயில் நிலையத்தில் கடந்த 22ம் தேதி நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் சென்னையை சேர்ந்த இன்போசிஸ் சாப்ட்வேர் என்ஜினியர் ராகவேந்திரன் கணேசன்(31) பலியானார்.

மகாராஷ்டிரா மாநிலம் பயேந்தர் பகுதியில் வசிக்கும் மக்கள் அதே பகுதியை சேர்ந்த அன்னபூரணியின் மகன் ராகவேந்திரன் பலியான செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி ராகவேந்திரனின் மரணத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
A young life, full of hope & promise cut short by mindless violence... condolences to family of Raghavendran, who lost his life in Brussels.
— Narendra Modi (@narendramodi) March 29, 2016
மூளையில்லாத வன்முறையால் ஒரு இளம் நபரின் வாழ்க்கை போய்விட்டது. பிரஸ்ஸல்ஸில் பலியான ராகவேந்திரனின் குடும்பத்தாருக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications