கெஜ்ரிவாலுக்கு வாழ்த்துச் சொன்ன மோடி: ஆதரவளிப்பதாக வாக்குறுதி
டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சி தலைவர் கெஜ்ரிவாலுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
டெல்லி சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது. இதில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 59 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. பாஜக 10 இடங்களில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் இதுவரை ஒரு தொகுதியில் கூட முன்னிலையில் இல்லை.
Spoke to @ArvindKejriwal & congratulated him on the win. Assured him Centre's complete support in the development of Delhi.
— Narendra Modi (@narendramodi) February 10, 2015 டெல்லி தேர்தலில் மோடி அலை தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. பாஜக முதல்வர் வேட்பாளர் கிரண் பேடி பின்தங்கியுள்ளார்.
இந்நிலையில் இது குறித்து பிரதமர் மோடி ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
அரவிந்த் கெஜ்ரிவாலை தொடர்பு கொண்டு பேசினேன். தேர்தல் வெற்றிக்காக அவருக்கு வாழ்த்து தெரிவித்தேன். டெல்லியை மேம்படுத்துவதற்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்று அவருக்கு உறுதி அளித்தேன் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications