அரசுகள் இவ்ளோ வரி போட்டால் பெட்ரோல், டீசல் விலை எப்படி குறையும்? படித்து பாருங்க, ஷாக் ஆகிருவீங்க
Recommended Video

டெல்லி: பெட்ரோல், டீசல் விலையை குறைக்க தேவையான நடவடிக்கை எடுக்க நிதி அமைச்சகம் ரெடியாக இல்லை என்று தெரிகிறது.
விலை உயர்வில் இருந்து சாமானியர்கள் பாதிக்காமல் இருக்க கலால் வரியை குறைக்க முன்வராத மத்திய நிதி அமைச்சகம், மாநில அரசுகள் வேண்டுமானால் பெட்ரோல் மீதான வாட் வரியை குறைத்துக்கொள்ள வேண்டும் என நினைக்கிறதாம்.
பெட்ரோல் விலை 55 மாதங்களில் முதல் முறையாக புது உச்சமாக டெல்லியில், லிட்டருக்கு ரூ. 74.50-க்கு விற்பனையானது. டீசல் விலை 65.75 ரூபாயாகவும் விற்பனையானது.

திட்ட பற்றாக்குறையாம்
பட்ஜெட் திட்ட பற்றாக்குறையை குறைப்பதற்கான வழியைக் கடைப்பிடிக்க அரசு உறுதியாக உள்ளதால், கலால் வரியை குறைக்க வாய்ப்பே இல்லை என்று நிதி அமைச்சக அதிகாரிகள் சிலர் தெரிவித்ததாக பிடிஐ செய்தி நிறுவனம் கூறுகிறது.

இதுதான் பொருளாதார நிலை
3.5 சதவீதமாக உள்ள மொத்த உள்நாட்டு உள்பத்தி பற்றாக்குறையை, 3.3 சதவீதமாக குறைக்கும் வேலையில் நிதி அமைச்சகம் ஈடுபட்டுள்ளதால், பெட்ரோலிய பொருட்கள் மீதான வரியை குறைத்து, சாமானியர்களுக்கு நிம்மதியளிக்கும் அறிவிப்பு வெளியாகாது என கூறப்படுகிறது.

வரி எவ்வளவு தெரியுமா?
மத்திய அரசு பெட்ரோல் மீது லிட்டருக்கு ரூ.19.48 கலால் வரியாகவும், டீசல் மீது ரூ.15.33 வரியாகவும் விதிக்கிறது. மாநிலங்களின் வாட் வரி விதிப்பு மாநிலத்திற்கு மாநிலம் வேறு பகுதிகிறது. டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் மீதான வாட் வரி ரூ.15.84 என்ற அளவிலும், டீசல் மீதான வாட் வரி ரூ.9.68 என்ற அளவிலும் உள்ளது.

ஜிஎஸ்டிக்குள் ஏன் பெட்ரோல் வரவில்லை
மத்திய அரசு கலால் வரியை குறைக்க விரும்பவில்லை, மாநில அரசுகளும் வாட் வரியை குறைக்க விரும்பவில்லை. பெட்ரோல் டீசலை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டு வர எந்த அரசுமே விரும்பவில்லை. இப்படி வரி வருவாயை கணக்கில் வைத்து மத்திய, மாநில அரசுகள் காய் நகர்த்துவதால்தாலும், இத்தனை வரி விதிப்புகள் காரணமாகவும்தான் சாமானியர்களுக்கு பெட்ரோல், டீசல் விலை குதிரை கொம்பாக மாறிவிட்டது.












Click it and Unblock the Notifications