"அவசரத்தில்" வரலாறு படைக்கும் மோடி... 4வது முறையாக நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டம்?
டெல்லி: நிலம் கையகப்படுத்தும் மசோதா நிறைவேறுவதில் சிக்கல் நீடிப்பதால் மீண்டும் ஒருமுறை அதுதொடர்பான அவசரச் சட்டத்தைப் பிரயோகிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாம். ஏற்கனவே 3 முறை இந்த அவசரசச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது என்பது நினைவிருக்கலாம்.
இதுவரை இப்படி எந்த அரசிலும் அதிக அளவில் ஒரு அவசரச் சட்டம் பிரயோகிக்கப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மழைக்கால நாடாளுமன்றக் கூட்டத் தொடருக்குப் பின்னர் நிலம் கையகப்படுத்தும் அவசரச் சட்டத்தை நான்காவது முறையாக கொண்டுவரவுள்ளதாம் மத்திய அரசு.
இதற்கிடையே நிலம் கையகப்படுத்தும் சட்ட மசோதா தொடர்பாக ஆராய அமைக்கப்பட்ட எஸ்.எஸ். அலுவாலியா தலைமையிலான நாடாளுமன்றக் கூட்டுக் குழு தனது அறிக்கையைத் தாக்கல் செய்ய மேலும் 2 வார காலம் கால நீட்டிப்பு கோரியுள்ளது.

மழைக் காலக் கூட்டத் தொடருக்கு முன்பு
மழைக்காலக் கூட்டத் தொடருக்கு முன்னதாக அலுவாலியா குழுவின் அறிக்கை வராது என்று நம்பப்படுகிறது. எனவே நிலம் கையகப்படுத்தும் அவசரச் சட்டத்தை மீண்டும் பிரயோகிக்க வேண்டிய நிலையில் மத்திய அரசு உள்ளது.

மே 31ல் மூன்றாவது முறையாக
கடந்த மே 31ம் தேதி மூன்றாவது முறையாக இந்த அவசரச் சட்டம் பிரயோகிக்கப்பட்டது என்பது நினைவிருக்கலாம். இப்படி அடுத்தடுத்து அவசரச் சட்டத்தைப் பிரயோகிப்பது வழக்கத்திற்கு விரோதமானது அல்ல என்று அரசுத் தரப்பில் கூறப்படுகிறது.

இதற்கு முன்பு 15 சட்டங்கள்
இதற்கு முன்பு 15 அவசரச் சட்டங்கள் 2 அல்லது 3 அதற்கு மேலும் பிரயோகிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசுத் தரப்பில் உதாரணம் காட்டப்படுகிறது.

6 மாத ஆயுள் காலம்
ஒரு அவசரச் சட்டத்தின் ஆயுள் காலம் என்பது 6 மாதங்களாகும். அதற்குள் சட்ட மசோதாவை நிறைவேற்ற முடியாவிட்டால் அவரசச் சட்டத்தை மீண்டும் பிரயோகிக்க முடியும்.

ஜூலை 21ல் தொடங்கும் மழைக்காலக் கூட்டத் தொடர்
நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர் ஜூலை 21ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 3ம் தேதி வரை நடைபெறவுள்ளது. சட்ட மசோதாவுக்கு காங்கிரஸும், அதன் ஆதரவுக் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. முதலில் ஆதரித்த அதிமுக இப்போது எதிர்க்க ஆரம்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications