காஷ்மீர் பிரியும்.. ஃபரூக் அப்துல்லா பேச்சுக்கு மோடி கடும் கண்டனம்
அகமதாபாத்: நாடு மதவாதிகளின் கைக்குப் போனால் ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருபகுதியாக இருக்காது என்று மத்திய அமைச்சர் ஃபரூக் அப்துல்லா பேசியதற்கு பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நரேந்திர மோடி அளித்துள்ள பதில்:

எங்கள் ரத்தத்திலேயே மதச்சார்பின்மை என்பதுதான் ஓடிக் கொண்டிருக்கிறது. ஃபரூக் அப்துல்லாவின் தந்தை ஆட்சி செய்த காலத்தில்தான் காஷ்மீரில் மதச்சார்பின்மை மீது பெருந்தாக்குதல் தொடுக்கப்பட்டு காயப்படுத்தப்பட்டது. பிரச்சனையும் சர்வதேசமயமாக்கப்பட்டது.
அங்கிருந்த பண்டிட்டுக்கள், ஹிந்துக்கள் என்பதால் மதத்தின் பெயரால் ஜம்மு காஷ்மீரை விட்டு துரத்தியடிக்கப்பட்டனர். அப்படி ஹிந்துக்களை வெளியேற்றியதும் ஃபரூக் அப்துல்லவின் ஆட்சிதான்.
எங்களுக்கு வாக்களித்தால் ஆற்றிலோ கடலிலோ மூழ்கவேண்டியதுதான் என்று பேசுவோர் தங்களது முகத்தை கண்ணாடியில் பார்க்க வேண்டும்.
இவ்வாறு மோடி பதிலளித்துள்ளார்.
ஒமர் அப்துல்லா கண்டனம்
இதனிடையே மோடியின் இந்த பேச்சுக்கு ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், என் தாத்தா சேக் அப்துல்லா முஸ்லிம் வாழும் பாகிஸ்தானுடன் காஷ்மீர் இணைவதை விரும்பவில்லை என்பதை நரேந்திர மோடி மறந்துவிட்டார்
மதச்சார்பின்மை குறித்து காஷ்மீரத்துக்கும் காஷ்மீரிகளுக்கும் நரேந்திர மோடி பாட்ம எடுக்க தேவையில்லை. 1947ஆம் ஆண்டு ஹிந்து- முஸ்லிம் வன்முறை வெடித்த போது சகிப்புத் தன்மையின் அடையாளமாக இருந்தது காஷ்மீர் மட்டுமே என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications