பிரதமர் வேட்பாளர் மோடி: சிவசேனா, அகாலிதளம் தலைவர்களிடம் முன்பே அறிவித்து ஆதரவு வாங்கிய ராஜ்நாத்!
Subscribe to Oneindia Tamil

பாரதிய ஜனதாவில் நரேந்திர மோடிக்கு அத்வானி கடும் எதிர்ப்பு தெரிவித்து கலகக் குரல் எழுப்பினார். ஆனால் அவரது எதிர்ப்பை புறக்கணித்துவிட்டது பாஜக தலைமை. மோடியைத்தான் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப் போகிறோம் என்று தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளான சிவசேனா, அகாலிதளம் தலைவர்களிடம் என்று ராஜ்நாத் சிங் முன்னமே கூறிவிட்டார்.
சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு ராஜ்நாத்சிங் தொலைபேசியில் இதை தெரிவித்தார். உத்தவ் தாக்கரேயும் மோடிக்கு தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார்.
பாஜகவின் மற்றொரு கூட்டணிக் கட்சியான அகாலிதளத் தலைவர் பாதலிடமும் நரேந்திர மோடியே வேட்பாளர் என்று ராஜ்நாத் இன்று காலையிலேயே தெரிவித்துவிட்டார். பாதலும் அதை ஆதரிப்பதாக கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications