ஹரியானா, மகாராஷ்டிராவில் மோடி தீவிர தேர்தல் பிரசாரம்!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: சட்டசபை தேர்தல்களை எதிர்கொண்டுள்ள ஹரியானா மற்றும் மகாராஷ்டிராவில் பிரதமர் நரேந்திர மோடி இன்று தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.
மகாராஷ்டிரா மற்றும் ஹரியானாவில் வரும் 15-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இம்மாநிலங்களில் வேட்பாளர்களுக்கு ஆதரவாக தலைவர்கள் தீவிரபிரசாரம் செய்து வருகின்றனர்.

அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய மோடி இன்று முற்பகல் 11 மணியளவில் ஹரியானாவின் கர்னால் என்ற இடத்தில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். இந்த பிரசாரத்தை நிறைவு செய்த பின்னர் மகாராஷ்டிரா மாநிலத்தில் மறைந்த முன்னாள் அமைச்சர் கோபிநாத் முண்டேவின் சொந்த ஊரான பீட்டில் மோடி வாக்கு சேகரித்தார்.
தொடர்ந்து இன்று மாலை மகாராஷ்டிராவில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மோடி பங்கேற்று பேசினார்.












Click it and Unblock the Notifications