மோடியின் ரூபாய் நோட்டு அறிவிப்பால் நாடே பேரழிவை சந்தித்துள்ளது: மாயாவதி காட்டம்
பிரதமர் மோடியின் ரூபாய் நோட்டு அறிவிப்பால் நாடே பேரழிவை சந்தித்திருப்பதாக பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி குற்றம்சாட்டியுள்ளார்.
லக்னோ: பிரதமர் மோடியின் ரூபாய் நோட்டு அறிவிப்பால் மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி, நாடே பேரழிவை சந்தித்திருப்பதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி காட்டம் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளுக்கு கடந்த 8ஆம் தேதி முதல் தடைவிதித்தது. இதனால் நாடு முழுவதும் பெறும் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளனது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வரும் பகுஜன் சமாஜ் தலைவருமான மாயாவதி செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது பிரதமர் மோடி ரூபாய் நோட்டு அறிவிப்பின் மூலம் நாட்டில் பொருளாதா அவசர நிலையை பிரகடனப்படுத்தி விட்டதாக குற்றம் சாட்டினார். மோடியின் இந்த ரூபாய் நோட்ட அறிவிப்பால் மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியிருப்பதாகவும் குறைகூறினார்.
மேலும் பா.ஜ.கவினர் பகுஜன் சமாஜ் கட்சியினர் மீது ஆதாரமற்ற புகார்களை தெரிவித்து வருவதாகவும், வரும் உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி ஒரு முக்கிய சவாலாக இருக்கும் என்றும் கூறினார். மோடியின் ரூபாய் நோட்டு அறிவிப்பால் நாடே பேரழிவவை சந்தித்திருப்பதாக கூறிய மாயாவதி, தனது தவறை சரி என நம்ப வைக்க மோடி கண்ணீரை ஆயுதமாக பயன்படுத்துவதாகவும் குற்றம்சாட்டினார்.












Click it and Unblock the Notifications