லோக்சபா தேர்தலில் மோடிக்காக பிரசாரம் செய்த குழுவினருக்கு விருது!
பெங்களூரு: லோக்சபா தேர்தலி்ல் நரேந்திர மோடி குழுவினருக்காக நடத்தப்பட்ட டிஜிட்டல் மற்றும் சோசியல் மீடியா பிரசாரத்திற்கு டேட்டாகுவெஸ்ட் விருது கிடைத்துள்ளது.
இந்த விருது மோடியின் பிரசாரக் குழுவினருக்குக் கிடைத்துள்ளது. பாஜக தனிப்பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சியைப் பிடிக்க இந்த பிரசாரக் குழுவினரின் அயராத பிரசாரம்தான் பெரும் உதவியாக இருந்தது என்பது நினைவிருக்கலாம்.
இந்த குழுவினருக்கே தற்போது டேட்டாகுவெஸ்ட் பாத்பிரேக்கர் விருது கிடைத்துள்ளது. இந்த விருதை பாஜகவின் ஐடி செல் தலைவரான டாக்டர் அரவிந்த் குப்தா பெற்றுக் கொண்டார்.

மோடியின் திறமை...
பின்னர் அவர் விழாவில் பேசுகையில், ‘பிரதமர் நரேந்திர மோடி, ஐடியை மிகவும் திறமையாக பயன்படுத்துகிறார். இந்திய மக்களிடம் மிகவும் நெருங்கிச் செல்ல தகவல் தொழில்நுட்பத்தை அவர் பெரிதும் பயன்படுத்துகிறார். அரசின் நோக்கம், கொள்கைகள், திட்டங்களையும் அவர் தகவல் தொழில்நுட்பத்தின் மூலம் மக்களிடம் கொண்டு செல்கிறார்' என்றார்.

ஐடி பெர்சன் விருது...
ஸ்னாப்டீல் நிறுவன இணை நிறுவனரும், தலைமை செயலதிகாரியுமான குனால் பாஹலுக்கு 2014ம் ஆண்டுக்கான சிறந்த டேட்டாகுவெஸ்ட் ஐடி பெர்சன் விருது கிடைத்தது. ஸ்னாப்டீல் நிறுவனத்தை நிறுவி அதை குறுகிய காலத்தில் இந்தியாவின் அதி வேக வளர்ச்சி பெற்ற இ காமர்ஸ் தளமாக மாற்றியதற்காக இந்த விருது அவருக்கு கிடைத்துள்ளது.

வாழ்நாள் சாதனையாளர் விருது...
வாழ்நாள் சாதனையாளர் விருதை நாஸ்காம் இணை நிறுவனர் செளரப் ஸ்ரீவத்சவா பெற்றார். ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் தலைவர் அருந்ததி பாட்டச்சார்யா டேட்டாகுவெஸ்ட் ஜூரி சிறப்பு விருதைப் பெற்றார்.
இன்போசிஸ் நிறுவனர்...
இந்த விருதுகளை இன்போசிஸ் நிறுவனர் என்.ஆர்.நாராயணமூர்த்தி அனைவருக்கும் வழங்கினார். இவர் 1996ம் ஆண்டு டேட்டாகுவெஸ்ட் ஐடி பெர்சன் விருதைப் பெற்றவர் என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications