சுதந்திர தின உரையின்போது நான் என்ன பேச.. மக்களிடம் கருத்து கேட்கும் மோடி
டெல்லி: சுதந்திர தின உரையின்போது எனது உரையில் என்னவெல்லாம் இடம் பெற வேண்டும் என்று விரும்புகிறீர்கள் என்று மக்களிடமே கருத்து கேட்டுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.
இதுகுறி்த்து தனக்கு எழுதுமாறும் அவர் மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார். இன்று அவர் வானொலி மூலம் ஆற்றிய மன் கி பாத் உரையின்போது இப்படி ஒரு கோரிக்கையை வைத்தார்.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு சுதந்திர தின உரையின்போது நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் கழிப்பறை கட்டுவதன் அவசியத்தை முக்கியமாக வலியுறுத்திப் பேசியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.

இன்றைய மன் கி பாத் உரையின்போது கார்கில் போர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தியும், நாட்டில் பரவலாக பெய்துள்ள மழை குறித்தும் பேசினார் பிரதமர்.
மேலும் தற்போது நல்ல மழை பெய்துள்ளதால், இந்த ஆண்டு காரிப் பருவ விளைச்சல் நன்றாக இருக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இதுபோக பல்வேறு நாட்டு நடப்புகள், அரசின் திட்டங்கள் உள்ளிட்டவை குறித்தும் பிரதமர் பேசினார்.
mygov.in என்ற அரசின் இணையதளத்தின் வெற்றி குறித்து விவரித்த பிரதமர், மக்கள் இந்த இணையதளத்தின் மூலம் தனக்கு தங்களுடைய கருத்துக்களையும், யோசனைகளையும் நேரடியாகவே தெரிவிக்கலாம் என்றும் கூறினார். மேலும், இந்த வருட சுதந்திர தின உரையின்போது தான் என்னவெல்லாம் பேசலாம் என்பது குறித்த யோசனைகளையும் இந்த இணையதளத்தின் வாயிலாக தெரிவிக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications