அது ஒரு இருண்ட காலம்.. வானொலி நிகழ்ச்சியில் காங்கிரசை வம்புக்கு இழுத்த மோடி
டெல்லி: இந்திரா காந்தி காலத்தில் கொண்டுவரப்பட்ட அவசர நிலை என்பது இந்திய வரலாற்றின் இருண்ட காலம் என்று பிரதமர் நரேந்திர மோடி தனது மன் கி பாத் வானொலி உரையில் இன்று தெரிவித்தார்.
19வது வானொலி உரையை இன்றையதினம் ஆற்றிய மோடி 1975ம் ஆண்டு இந்திரா காந்தி காலத்தில் சர்வாதிகார முறையில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டதை நினைவு கூர்ந்து பேசினார். இதே மாதத்தில்தான் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது என்பதால் இன்றைய மான் கி பாத்தில் மோடி அதை நினைவு கூர்ந்தார்.
மோடி கூறியதாவது: 1975ம் ஆண்டு ஜூன் 25-26ம் தேதி இரவு நமது ஜனநாயகத்தின் கருப்பு இரவுகளாகும். ஆயிரக்கணக்கான அரசியல் தலைவர்களும், மாணவ இயக்க தலைவர்களும், காரணம் இன்றி சிறையில் தள்ளப்பட்டனர்.
ஜனநாயகம்தான், நமக்கு பலம். அந்த பலம் பலவீனப்படுத்தப்பட்டது. இருப்பினும், மக்கள் ஜனநாயகத்தின் மீது முழு நம்பிக்கை வைத்திருந்ததால் அது மீட்கப்பட்டது. எனது நாட்டு மக்கள் எப்போதுமே, ஜனநாயகத்திற்குதான் முக்கியத்துவம் தருவார்கள் என்பது மகிழ்ச்சியளிக்கிறது.
மக்களின் குரல் ஒரு காலத்தில் ஒடுக்கப்பட்டது. ஆனால், இப்போது, அரசு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து மக்களால் வெளிப்படையாக பேச முடிகிறது. இவ்வாறு மோடி தெரிவித்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications