For Daily Alerts
Just In
மெய்ன் மோடி போல் ரஹா ஹூன்.. செல்போனிலும் வலம் வருகிறது மோடி பேச்சு!
டெல்லி: டெல்லியில் பல தலைவர்களை தூங்க வைத்த பிரதமர் மோடியின் சுதந்திர தின உரை தற்போது செல்போன் வழியாகவும் வலம் வர ஆரம்பித்துள்ளது.
மோடி ஆப்பிலிருந்து இந்த உரை அனுப்பப்பட்டு வருகிறது. எஸ்.எம்.எஸ். மூலமாக நாட்டு மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துகளைக் கூறிக் கொண்டு எனது உரையை கேட்க இங்கு போகவும் என்று மோடி கூறுவது போல இந்த செய்தி வலம் வருகிறது.
பல செல்போன்களில் இந்த எஸ்எம்எஸ் பெறப்பட்டுள்ளது. இன்று காலை டெல்லி செங்கோட்டையில் நடந்த 70வது சுதந்திர தின விழாவையொட்டி பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். அப்போது மத்திய அமைச்சர்கள், அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட பலர் தூங்குவது போன்ற புகைப்படங்கள் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தின என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது அந்த உரைதான் செல்போன் வாயிலாக மக்களை நேரடியாக சென்றடைந்து கொண்டிருக்கிறது.
Comments
English summary
PM Narendra Modi's Red fort Independence day speech has been sent to the mobile phones all over the country.
Story first published: Monday, August 15, 2016, 16:18 [IST]