பிரதமர் மோடியின் நெக்ஸ்ட் டூர் ஆப்பிரிக்கா ! வரும் 7 ஆம் தேதி செல்கிறார் !
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் அடுத்தகட்ட அரசு முறைப் பயணம் தயாராகிவிட்டது. அதன்படி, வரும் 7-ம் தேதியன்று அவர் ஆப்ரிக்க கண்டத்தில் உள்ள 4 நாடுகளுக்கு செல்ல உள்ளார்.
முன்னதாக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, துணை ஜனாதிபதி அமீது அன்சாரி ஆகியோர் ஆப்பிரிக்க நாடுகளுக்கு சென்று வந்துள்ளனர். இந்நிலையில் ஜூலை 7 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை ஆப்பிரிக்க நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார்.

வருகிற 7-ம் தேதியன்று முதல் நாடாக மொசாம்பிக் நாட்டுக்கு செல்லும் அவர் அதன்பின்னர் 8 மற்றும் 9-ம் தேதிகளில் தென்னாப்பிரிக்கா, ஜோகன்னஸ்பெர்க்கில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். அதைத்தொடர்ந்து, 10-ம் தேதி தான்சானியாவுக்கும், 11-ம் தேதி கென்ய நாட்டுக்கும் செல்கிறார்.
அதனையடுத்து, 12-ம் தேதியன்று தனது சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி நாடு திரும்புகிறார். இந்த பயணத்தின் போது, பல்லாயிரக்கணக்கான இந்திய வம்சாவளியினர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் பங்கேற்று மோடி உரையாற்றுவார் என தெரிகிறது.
இந்நிலையில், பிரதமர் மோடியை வரவேற்கும் வகையில் ஜோகன்னஸ்பெர்க்கில் ஏற்பாடு செய்யப்பட்டு வரும் பிரம்மாண்ட நிகழ்வில் பங்கேற்ற இதுவரை 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளதாக 'வெல்கம் மோடி' கமிட்டியின் தென் ஆப்பிரிக்க தலைவர் ராமன் தவான் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications