கடவுளின் ஆணை: 16 மாத பெண் குழந்தையை ஓடும் ரயிலில் இருந்து வீசிய தாய்
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் கடவுள் தனது கனவில் வந்து தனது 16 மாத பெண் குழந்தையை பலி கொடுக்கச் சொன்னதாகக் கூறி பெண் ஒருவர் தனது குழந்தையை ஓடும் ரயிலில் இருந்து தூக்கி வீசினார்.
மேற்கு வங்க மாநிலம் வடக்கு பர்கனாஸ் மாவட்டத்தில் உள்ள நைஹதியில் இருந்து உள்ளூர் ரயில் ஒன்று நேற்று காலை 10.50 மணிக்கு கிளம்பியது. ரயில் ஹலிசாரை நோக்கி சென்றபோது பூர்ணிமா சாஹா என்ற ஒருவர் தனது 16 மாத பெண் குழந்தையான மமணியை ரயிலில் இருந்து தூக்கி வீசி எறிந்தார். இதைப் பார்த்த சக பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே ஒரு பயணி சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினார். ரயில் நின்றதும் பயணிகள் குழந்தை வீசப்பட்ட இடத்தை நோக்கி ஓடினர். அப்போது ரயில் தண்டவாளம் ஓரம் குடிசைகளில் வாழ்வோர் குழந்தையை காப்பாற்றியதை பார்த்து பயணிகள் நிம்மதி அடைந்தனர். தலை, கை மற்றும் கால்களில் காயம் அடைந்த குழந்தை நைஹதி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. குழந்தையின் தலையில் மருத்துவர்கள் தையல் போட்டுள்ளனர். குழந்தைக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து பயணிகள் பூர்ணிமாவை பிடித்து ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் பூர்ணிமாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர். விசாரணையில் பூர்ணிமா கூறுகையில், மா தாரா(தாராபித் கோவிலில் உள்ள கடவுள்) என் கனவில் வந்து குழந்தையை தியாகம் செய் பலி கொடு இல்லை என்றால் மடிந்து போ என்று கூறினார். அதனால் தான் குழந்தையை ரயிலில் இருந்து வீசினேன் என்று திரும்பத் திரும்ப கூறினார்.
விசாரணையில் பூர்ணிமாவின் கணவர் கிருஷ்ணா சாஹா லாட்டரி டிக்கெட் விற்பவர் என்றும், அவர்களுக்கு மம்பி என்ற மகள் உள்ளதும் தெரிய வந்தது. மம்பி ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.
-
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்?












Click it and Unblock the Notifications