தேர்தல் பறக்கும் படையினர் சோதனை - 5 மாநிலங்களில் இதுவரை ரூ.32 லட்சம் பறிமுதல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தேர்தலை ஒட்டி இதுவரையில் நடத்தப்பட்டுள்ள வாகன சோதனையில் 5மாநிலங்களிலும் கிட்டதட்ட ரூபாய் 31 கோடி சிக்கியுள்ளதாக

தமிழ்நாடு, மேற்கு வங்காளம், அசாம், கேரளா மற்றும் பாண்டிச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் ஏப்ரல் 4 முதல் மே 16 வரை நடைபெறும் என தேர்தல் கமிஷன் கடந்த 4 ஆம் தேதி அறிவித்தது.

Money confiscated as crores in 5 states

தேர்தல் அறிவிக்கப்பட்ட 5 மாநிலங்களிலும் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் பணம் கொடுத்து சட்டவிரோதமாக வாக்குகளை பெறுவதை கட்டுப்படுத்தவும் கருப்பு பண நடமாட்டத்தை கண்காணிக்கவும் மத்திய நிதி அமைச்சகத்தில் உள்ள பல்வேறு அமைப்புகள் மூலம் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் 5 மாநிலங்களிலும் பறக்கும் படையை தேர்தல் கமிஷன் அமைத்து, அதனை தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.

பறக்கும் படையினரின் அதிரடி சோதனையில் 5 மாநிலங்களில் இதுவரை ரூ.31 கோடியே 83 லட்சத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து உள்ளனர். இதில் அதிகபட்சமாக தமிழகத்தில் ரூபாய் 15 கோடியே 19 லட்சம் சிக்கி உள்ளது. அதற்கு அடுத்தபடியாக மேற்கு வங்காள மாநிலத்தில் ரூபாய் 5 கோடியே 64 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அசாமில் ரூபாய் 5 கோடியே 43 லட்சமும், கேரளாவில் ரூபாய் 5 கோடியே 27 லட்சமும், யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் ரூபாய் 30 லட்சமும் மொத்தம் ரூபாய் 31 கோடியே 83 லட்சத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+