மும்பையில் இன்னும் 2 நாட்களுக்கு பிறகு கன மழை.. வானிலை ஆய்வு மையம் வார்னிங்
அந்த நாட்களில் வீட்டிலேயே இருக்குமாறு பொதுமக்களுக்கு எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செயற்கைக்கோள் படத்தில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மேக மூட்டம் உள்ளது.
மும்பை: 9ம் தேதி முதல் 2 நாட்களுக்கு மும்பை, கோவா உள்ளிட்ட கொங்கன் கடற்கரை பகுதிகளில் பெரும் மழை பொழிவுக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் (IMD) அறிவித்துள்ளது.
தென் மேற்கு பருவமழையின் தாக்கத்தால் கர்நாடகா, ராயலசீமா, தெற்கு கொங்கன் மண்டலத்தின் சில பகுதிகள், கோவா மற்றும் தெலுங்கானா, கடலோர ஆந்திரா பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது.
ஜூன் 9 முதல் 11ம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில், மும்பையில் கன மழைக்கு வாய்ப்புள்ளது என எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, மண்டல வானிலை ஆய்வு மையம் மும்பை மற்றும் தானேவுக்கு மழை அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
அந்த நாட்களில் வீட்டிலேயே இருக்குமாறு பொதுமக்களுக்கு எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செயற்கைக்கோள் படத்தில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மேக மூட்டம் இருப்பதை பார்க்க முடிகிறது.