ஐஎஸ்ஐஎஸ் படையில் மேலும் மேலும் பல இந்தியர்கள்!
மும்பை: ஈராக்கை ஆட்டிப்படைத்து வரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் மேலும் பல இந்தியர்கள் சேர்ந்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
மகாராஷ்டிராவைச் சேர்ந்த நான்கு பேர் உள்பட மொத்தம் 18 இந்தியர்கள் இடம் பெற்றிருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது மேலும் பல இளைஞர்கள் அதில் இணைந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இவர்களும் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்கள் என்று தெரிகிறது.
தானே மாவட்டத்தைச் சேர்ந்த மும்ப்ரா மற்றும் பிவாண்டியைச் சேர்ந்த 15 பேர் தற்போது அதில் இணைந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இதே பகுதியைச் சேர்ந்த ஆரிப் மஜீத், அமன் தன்டெல், சலீம் டங்கி, பஹத் ஷேக் ஆகியோர் ஏற்கனவே அதில் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கர்பலாவுக்கு புனித யாத்திரைக்காக போவதாக கூறி விட்டு இவர்கள் ஈராக்குக்குப் போய் விட்டனர்.
இதற்கிடையே மகாராஷ்டிராவைச் சேர்ந்த சில உள்ளூர் தொழிலதிபர்கள்தான் இளைஞர்களை மூளைச் சலவை செய்து ஈராக்குக்கு அனுப்பி வைப்பதாக போலீஸார் கூறுகிறார்கள். இவர்கள்தான் இளைஞர்களுக்குப் பணமும் கொடுத்து அனுப்புவதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே, கேரளா, உ.பி, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், ஆந்திரா ஆகிய மாநிலங்களிலிருந்து 2000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஈராக் தீவிரவாத அமைப்பில் சேர விண்ணப்பித்திருப்பதாக ஒரு பரபரப்புத் தகவல் கூறுகிறது.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications