காஷ்மீர் தாக்குதலில் பலியான ராணுவத்தினரில் பெரும்பாலானோர் தீயில் கருகி இறந்த பரிதாபம்
ஸ்ரீநகர்: காஷ்மீரில் இன்று காலை நடந்த தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்த ராணுவத்தினரில் பலர் தீயில் கருகி உயிரிழந்துள்ளனர் என்று தெரிய வந்துள்ளது.
காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டம் யூரி பகுதியில் உள்ள ராணுவ நிர்வாகத் தலைமையகத்தின் மீது இன்று அதிகாலையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதில் 17 ராணுவத்தினர் உயிரிழந்தனர். தாக்குதல் நடத்திய 4 தீவிரவாதிகளையும் ராணுவம் சுட்டுக் கொன்று விட்டது. 20க்கும் மேற்பட்ட ராணுவத்தினர் இந்த தாக்குதலில் காயமடைந்தனர்.

இன்று அதிகாலையில் தாக்குதல் நடந்தபோது பெரும்பாலான ராணுவத்தினருக்கு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. இருளைப் பயன்படுத்திக் கொண்டு தீவிரவாதிகள் தாக்கியுள்ளனர். அதை விட முக்கியமாக, ராணுவத்தினர் தங்கியிருந்த டென்டுகள் மீது அவர்கள் கையெறி குண்டை வீசி தீப்பிடிக்கச் செய்தனர். இதனால்தான் நமக்கு சேதம் அதிகமாகி விட்டது.
உயிரிழந்த 17 ராணுவத்தினரில் 14 பேர் தீயில் கருகிதான் உயிரழந்துள்ளனர். ஒரு தரப்பு வீரர்கள் பணி முடிந்து கிளம்பும் சமயத்தில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. தீவிரவாதிகள் உள்ளே புகுந்ததுமே கையெறி குண்டுகளை வீசித்தான் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் தான் நமக்கு பெரும் சேதம் ஏற்பட்டு விட்டது.
மொத்தம் 6 மணி நேரம் நடந்த துப்பாக்கிச் சண்டை 4 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டதுடன் முடிவுக்கு வந்தது. கடந்த பல வருடங்களில் தீவிரவாதிகளால் ராணுவம் அடைந்த மிகப் பெரிய உயிர்ச் சேதம் இதுதான் என்பதால் ராணுவத்தினர் கடும் கோபத்தில் உள்ளனர்.
ஜெய்ஸ் இ முகம்மது
இதற்கிடையே இந்தத் தாக்குதலுக்கு ஜெய்ஸ் இ முகம்மது தீவிரவாத அமைப்பு காரணமாக இருக்கலாம் என்ற ஒரு சந்தேகம் வலுத்துள்ளது. முதலில் லஷ்கர் இ தொய்பா மீது சந்தேகம் எழுப்பப்பட்டது. ஆனால் தற்போது சந்தேகப் பார்வை ஜெய்ஸ் இ முகம்மது மீது திரும்பியுள்ளது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications