கொல்கத்தா: ஹோட்டல் அறையில் கொடூர கொலை… தாய்,மகள் சடலம் மீட்பு
கொல்கத்தா: ஹோட்டல் அறையில் மனைவி, மகளுக்கு தூக்கமாத்திரை கொடுத்து மின்சாரம் பாய்ச்சி கொன்றுவிட்டு தலைமறைவாகிவிட்டான் ஒரு கெடூரன். விடுதி ஊழியர் கொடுத்த தகவலின் அடிப்படையில் ஹோட்டல் அலமாரிக்குள்ளிருந்து, தாயும் மகளையும் சடலமாக போலீசார் மீட்ட சம்பவம் கொல்கத்தாவில் அதிர்ச்சியலைகளை உருவாக்கியுள்ளது.
கொல்கத்தாவின் ரபி அகமது கித்வாய் சாலையில் உள்ள அந்த ஹோட்டலுக்கு திங்கட்கிழமை வந்த நபர் ஒருவர், தனது பெயர் சம்புநாத் குப்தா என்றும் தான் பீகாரிலிருந்து வருவதாகக் கூறி, தன்னுடைய மனைவி மற்றும் மகளுடன் தங்குவதற்காக ரூம் ஒன்றினை வாடகைக்கு எடுத்தார். அதன்பிறகு அவர்களைப் பற்றி எந்த தகவலும் இல்லை.
மூவரும் தங்கிய அறை திறக்கப்படவே இல்லை. இதனால் ஏதோ அசம்பாவிதம் நடந்திருப்பதாக ஹோட்டல் ஊழியர் ஒருவர் போலீசில் தகவல் கூறவே, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அதிர்ச்சியில் உறைந்தனர். அறையில் தூக்க மாத்திரைகள் அங்கங்கே சிதறிக் கிடந்தது. போலீசார் அறையை முழுமையாக சோதனை செய்யும் போது, அலமாரி ஒன்றிற்குள் தாயும் மகளும் சடமாக இருப்பதைக் கண்டுபிடித்தனர்.
அவர்கள் இரவு உணவில் தூக்க மாத்திரையை கலந்து கொடுத்து, ஆழ்ந்த தூக்கத்தில் அவர்கள் இருக்கும் போது உயரழுத்த மின்சாரத்தை அவர்களின் உடலில் செலுத்தி, இறந்து போன, பிஞ்சுக் குழந்தையையும் அதன் தாயையும் கயிற்றால் கட்டி அலமாரிக்குள் அடைத்து விட்டு, அவர்களுடன் வந்த நபர் தப்பி ஓடியிருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து, ஹோட்டலில் அறையெடுத்து தங்கிய சம்புநாத் குப்தா என்ற அந்த நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கொல்கத்தாவின் மக்கள் நடமாட்டம் அதிகம் மிகுந்த பகுதியில் உள்ள ஹோட்டலில் இருந்து தாயும், மகளும் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியுள்ளது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications