சைக்கிளை ரிப்பேர் செய்துகொடுக்க தாய் மறுப்பு.. 15 வயது சிறுமி விஷம் குடித்து தற்கொலை!
பெங்களூர்: சைக்கிளை ரிப்பேர் செய்து கொடுக்க தாய் மறுத்ததால், 15 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூர், ஒயிட்பீல்ட் அடுத்த ஹிம்மதிஹள்ளி என்ற பகுதியிலுள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார், சந்திரலேகா. இவரது தாய் கணவரை இழந்த நிலையில், வீட்டுவேலைகள் செய்து குழந்தைகளை படிக்க வைத்தார்.
இவரது மூத்த மகன் மல்லிகார்ஜுனா பிகாம் 3ம் ஆண்டும், இளைய மகன், சிவானந்தா 10ம் வகுப்பும் படித்து வருகின்றனர். சந்திரலேகாவுக்கு அவரது தாய் ஒரு சைக்கிள் வாங்கிக்கொண்டிருந்தார். அது சமீபகாலமாக ரிப்பேராகி இருந்ததாம். சம்பவத்தன்று, வேலைக்கு கிளம்பிய தாயிடம், சைக்கிளை ரிப்பேர் செய்து தரும்படி சந்திரலேகா கேட்டுள்ளார். ஆனால், பணப்பற்றாக்குறை மற்றும், தனது மகள், ஊர்சுற்றுவது பிடிக்காமை போன்ற காரணங்களால், பணம் கொடுத்த தாய் மறுத்துவிட்டு கிளம்பியுள்ளார்.
இதனால் மனமுடைந்த சந்திரலேகா, பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்துகொண்டார்.












Click it and Unblock the Notifications