என்னாது யூனிபார்ம் தைக்கலியா?.. அப்போ துணியே இல்லாம நிர்வாணமா வாங்க.. பள்ளி முதல்வரின் ஆபாச பேச்சு
போபால்: மத்திய பிரதேசத்தில் ராஜ்கர் மாவட்டத்திற்குள்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளியில் முதல்வர் மாணவிகளிடம் ஆபாசமாக பேசியதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
மத்திய பிரதேசத்தில் ராஜ்கர் மாவட்டத்திற்குள்பட்ட பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு முதல்வராக இருப்பவர் ராதேஷ்யாம் மாளவியா.
இந்த நிலையில் கடந்த சனிக்கிழமையன்று 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவிகள் பள்ளிக்கு சீருடை அணியாமல் வந்துள்ளனர். இதை கவனித்த பள்ளி தலைமையாசிரியர் ஏன் சீருடை அணியவில்லை என கேட்டுள்ளார். அதற்கு மாணவிகள் எங்களின் சீருடை இன்னும் டெய்லர் கடையில் இருக்கிறது. இன்னும் தைக்கப்படவில்லை என கூறியுள்ளனர்.

மாணவர்கள்
ஆனால் இதை அவர் ஏற்கவில்லை. அதற்கு அவர் அந்த மாணவிகளை ஆபாசமாக பேசியுள்ளார். ஃபேஷனாக உடை அணிந்து மாணவர்களைக் கெடுப்பதே நீங்கதான். பள்ளி சீருடை இல்லாவிட்டால் நிர்வாணமாக பள்ளிக்கு வாங்க என மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகளை பயன்படுத்தி பேசியுள்ளார்.

பெற்றோரிடம் புகார்
இதுகுறித்து மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து பள்ளிக்கு வந்த பெற்றோர் பள்ளி முதல்வரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் பள்ளி முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதையடுத்து போலீஸார் புகாரின் பேரில் பள்ளி முதல்வர் ராதேஷ்யாம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

விவகாரம்
தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகிறார்கள். அது போல் துறை ரீதியான நடவடிக்கைக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் அவரை இடைநீக்கம் செய்துள்ளது. பள்ளி ஆசிரியர்கள் தவறு செய்தால் பள்ளி முதல்வரிடம் போய் முறையிடலாம். ஆனால் இந்த விவகாரத்தில் பள்ளி முதல்வரே தவறு செய்துள்ளார்.

மூடப்பட்ட பள்ளிகள்
கொரோனா காலத்தில் மூடப்பட்ட பள்ளிகள் இப்போதுதான் ஒவ்வொரு மாநிலமாக திறக்கப்பட்டு வருகின்றன. அதுவும் அந்த மாநிலத்தில் கொரோனா கட்டுக்குள் இருக்கிறதா என்பதை பார்த்து திறக்கப்பட்டு வருகின்றன. பள்ளிகள் இத்தனை மாதங்களாக திறக்கப்படாமல் இருந்ததால் பள்ளி திறக்கும் போது ஒரே நேரத்தில் நிறைய பேர் கொடுத்ததால் சீருடைகளை தைப்பதில் தாமதமாகி விட்டது. இந்த சிறிய நுணுக்கங்களை கூட தெரியாத ஒருவர் பள்ளி முதல்வராக இருக்கிறார். எல்லாம் காலக் கொடுமை! எல்லா மாணவ மாணவிகளும் நம் குழந்தைகள் என எண்ணாமல் சிறிதும் கூச்சமில்லாமல் இப்படி பேசுவதற்கு அந்த பள்ளி முதல்வருக்கு எங்கிருந்து தைரியம் வந்தது என கேட்கிறார்கள் குழந்தையின் பெற்றோர்கள்.












Click it and Unblock the Notifications