'சத்யம்' ராமலிங்க ராஜூ சிறை செல்வாரா? வருமான வரி மோசடி வழக்கில் நாளை தீர்ப்பு!
Subscribe to Oneindia Tamil
ஹைதராபாத்: சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனரான ராமலிங்க ராஜூ மீதான வருமான வரி மோசடி வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்பட இருக்கிறது. ராமலிங்க ராஜூவின் எதிர்காலம் சிறையிலா? வெளியிலா என்பதை தெரிவிக்க இருக்கிறது நாளைய தீர்ப்பு.
ஹைதராபாத்தைச் சேர்ந்த சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனம் வருமான வரி கணக்குகளை திருத்தி பல நூறு கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டது கடந்த 2009 ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து அதன் அதிபர் ராமலிங்க ராஜு, 2 சகோதர்கள் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். தற்போது அவர்கள் ஜாமீனில் உள்ளனர்.
இவ்வழக்கில் நீதிபதி பி.வி.எல்.என் சக்கரவர்த்தி நாளை தீர்ப்பு அளிக்க இருக்கிறார். இத் தீர்ப்பின் அடிப்படையில்தான் ராமலிங்க ராஜூவின் எதிர்காலம் சிறையிலா? அல்லது வெளியிலா என்பது தெரியவரும்.












Click it and Unblock the Notifications