பணக்காரருக்கான பந்தாவே துளியும் இல்லையே! என்ன பணிவு! ஏழை கொடுத்த உணவை சுவைத்த முகேஷ் அம்பானி
காந்திநகர்: முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி ராதிகா மெர்சன்ட் ஆகியோரின் திருமணத்தையொட்டி குஜராத்தின் ஜாம் நகரில் உள்ள 51 ஆயிரம் கிராம மக்களுக்கு அறுசுவை விருந்து படைக்கப்பட்டது. அப்போது ஒருவர் தயாரித்து கொண்டு வந்த உணவை எந்த வித பந்தாவும் இன்றி முகேஷ் அம்பானி சுவைத்தார்.
இந்தியாவின் பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி- நீடா தம்பதியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி. தனது எடையை 6 மாதங்களில் 100 கிலோ வரை குறைத்து இணையத்தில் பேசும் பொருளானார்.

இந்த நிலையில் இவருக்கும் இவருடைய தோழியும் என்கோர் நிறுவனத்தை சேர்ந்த ராதிகா மெர்சன்ட்டுக்கும் காதல் ஏற்பட்டது. இருவரது திருமணத்திற்கும் பெற்றோர் ஒப்புதல் அளித்தனர். இதையடுத்து கடந்த ஆண்டு இருவருக்கும் குஜராத்திய முறைபடி கோலாகலமாக நிச்சயதார்த்தம் நடந்தது.
இந்த நிலையில் அவர்களது திருமணம் ஜூலை 12 ஆம் தேதி நடைபெறுகிறது. நாளை முதல் 3 நாட்களுக்கு திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. ஜாம்நகரில் கிரீன்ஸ் என்ற ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான இடத்தில்தான் இவர்களுக்கு இந்த திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சி நடக்கிறது.
இதற்காக ஜாம் நகரே விழாக் கோலம் பூண்டுள்ளது. இந்த நிலையில் மகனின் திருமணத்தையொட்டி அப்பகுதி கிராம மக்களுக்கு விருந்து வைக்க முகேஷ் அம்பானி முடிவு செய்திருந்தார். அதன்படி நேற்றைய தினம் 51 ஆயிரம் கிராமமக்களுக்கு அறுசுவை விருந்து படைக்கப்பட்டது.

இந்த விருந்தில் முகேஷ் அம்பானி, ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்சன்ட் ஆகியோர் தங்கள் கைகளால் உணவை பரிமாறினர். சிரித்த முகத்துடன் உணவை வழங்கிய நிலையில் மக்கள் வயிறார சாப்பிட்டு மனதார வாழ்த்தினர். மேலும் தம்பதிக்கு சிலர் பரிசு பொருட்களையும் கொண்டு வந்திருந்தனர்.
அது போல் அந்த கூட்டத்தில் ஒருவர் முகேஷ் அம்பானிக்கு தன் கையால் சமைத்த உணவை கொடுத்தார். அதை முகேஷ் அன்போடு சுவைத்தார். இந்த விருந்து நிகழ்ச்சியில் மணப்பெண்ணின் பெற்றோர் விரேன் மெர்ச்சன்ட் மற்றும் சைலா மெர்ச்சன்டும் கலந்து கொண்டனர்.

இதைத் தொடர்ந்து குஜராத்தி பாரம்பரிய நடனமும் அரங்கேறியது. இந்த உணவு நிகழ்ச்சி அடுத்த 4 நாட்களுக்கும் நடைபெறுகிறது. ராதிகா மெர்சன்ட் விருந்து நிகழ்ச்சிக்கு வந்த குழந்தைகளிடம் விளையாடி மகிழ்ந்தார். நாளை நடைபெறும் திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சியில் 1000 சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொள்கிறார்கள்.
இந்த நிகழ்வுக்கு மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், மெலிந்தா கேட்ஸ், மெட்டா சிஇஓ மார்க் ஜூக்கர்பெர்க், அடோப் சிஇஓ சாந்தனு நாராயண், ஆல்ஃபாபெட் சிஇஓ சுந்தர் பிச்சை, வால்ட் டிஸ்னி சிஇஓ பாப் ஐகர் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications