திரிணாமுல் காங்கிரஸ் பொதுச்செயலர் பதவியில் இருந்து முகுல்ராய் நீக்கம்
டெல்லி: திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலர் பதவியில் இருந்து மூத்த தலைவரான முகுல் ராய் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் மமதா பானர்ஜிக்கு அடுத்ததாக நம்பர் 2 நிலையில் இருந்தவர் முகுல்ராய். அண்மையில் சாரதா சிட் பண்ட் மோசடி வழக்கில் சி.பி.ஐ.யால் விசாரிக்கப்பட்டார் முகுல் ராய்.

இதனைத் தொடர்ந்து முகுல் ராயை கட்சியில் இருந்து ஓரம்கட்டத் தொடங்கினார் மமதா பானர்ஜி. திரிணாமுல் காங்கிரஸ் பொதுச்செயலர் பதவியில் முகுல் ராய் மட்டுமே இருந்து வந்தார். அந்த பதவிக்கு எம்.பி. சுப்ரதா பாக்சியை நியமித்து முகுல் ராயின் முக்கியத்துவத்தைக் குறைத்தார் மமதா.
அதேபோல் நாடாளுமன்றம் தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டங்களுக்கு திரிணாமுல் காங்கிரஸின் பிரதிநிதியாக முகுல் ராய் மட்டுமே கலந்து கொண்டிருந்தார். இதற்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு லோக்சபா மற்றும் ராஜ்யசபாவின் திரிணாமுல் கொறாடாக்களான கல்யாண் பானர்ஜியும் ஓ பிரையனும் கலந்து கொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டது.
இதனால் திரிணாமுல் காங்கிரஸில் இருந்து வெளியேறி முகுல்ராய் தனிக்கட்சியைத் தொடங்கக் கூடும் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் பதவியில் இருந்து முகுல் ராய் நீக்கப்பட்டார்.
மேலும் அவர் மத்திய அமைச்சர்களான அருண் ஜேட்லி மற்றும் ராஜ்நாத்சிங்கையும் சந்தித்து பேசியிருப்பதும் தெரியவந்துள்ளது. இந்த சந்திப்புகளின் அடிப்படையில் திரிணாமுல் காங்கிரஸை விட்டு விலகி பாரதிய ஜனதா கட்சியில் முகுல் ராய் இணையக் கூடும் என டெல்லி தகவல்கள் தெரிவித்திருந்தன.
இந்நிலையில் முகுல்ராய் வகித்து வந்த பொதுச்செயலர் பதவியும் இன்று பறிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் திரிணாமுல் காங்கிரஸில் இருந்து விலகி பாரதிய ஜனதாவில் இணைவது உறுதியாகி இருக்கிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications