மூன்றாவது அணியைச் சேர்ந்த ஒருவர்தான் அடுத்த பிரதமர்: முலாயம் நம்பிக்கை

Subscribe to Oneindia Tamil

Mulayam confident of forming Third Front after 2014 polls
டெல்லி: லோக்சபா தேர்தலுக்குப் பின்னர் மத்தியில் மூன்றாவது அணிதான் ஆட்சி அமைக்கும் என்றும் நாட்டின் அடுத்த பிரதமராக அந்த அணியைச் சேர்ந்த ஒருவர்தான் இருப்பார் என்றும் சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போதைய நிலையில் மூன்றாவது அணி உருவாகாது. தொகுதிப் பங்கீட்டில் பல சிக்கல்கள், கருத்து வேறுபாடுகள் உருவாகக் கூடும்.

அந்தந்த கட்சிகள் தங்களுக்கான கூட்டணியுடன் தேர்தலை எதிர்கொள்ளும். ஆனால் தேர்தலுக்குப் பின்னர் நிச்சயமாக மூன்றாவது அணி உருவாகும். இது தொடர்பாக இடதுசாரித் தலைவர் பிரகாஷ் காரத், ஏ.பி. பரதன் ஆகியோருடன் பேசி வருகிறோம்.

மூன்றாவது அணிதான் மத்தியில் ஆட்சி அமைக்கும். நாட்டின் அடுத்த பிரதமராக மூன்றாவது அணியைச் சேர்ந்த ஒருவர்தான் பதவி வகிப்பார் என்றார்.

அவரிடம் மூன்றாவது அணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு அவர் நேரிடையாக எந்த பதிலும் அளிக்கவில்லை. ஆனால் மூன்றாவது அணியைச் சேர்ந்த ஒருவர்தான் நாட்டின் அடுத்த பிரதமராக பதவியேற்பார் என்பது மட்டும் உறுதி என்று கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+