இன்ஸ்பெக்டரை சுட்டுக் கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட சப் இன்ஸ்பெக்டர்
மும்பை: மும்பை அருகே காவல் நிலையத்தில் வைத்து தனது உயரதிகாரியைச் சுட்டுக் கொன்று விட்டு துணை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் அதே துப்பாக்கியால் சுட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை அருகேயுள்ள வோகேலா என்ற இடத்தில் உள்ள காவல் நிலையத்தில் சீனியர் இன்ஸ்பெக்டர் விலாஸ் ஜோசி என்பவருக்கும், துணை இன்ஸ்பெக்டர் திலிப் என்பவருக்கும் இடையே வருகைப்பதிவு தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த திலீப் தனது துப்பாக்கியால் ஜோசியை நோக்கி சுட்டுள்ளார். இதில் ஜோடிக்கு தோளிலும், மற்றொரு போலீசுக்கு தொடைப்பகுதியிலும் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் அதே துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு திலீப் தற்கொலை செய்து கொண்டார்.
படுகாயமடைந்த ஜோசி மற்றும் மற்றொரு போலீஸ்காரரை மற்ற அதிகாரிகள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜோசி பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொரு போலீஸ்காரருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சம்பவம் நடப்பதற்கு முதல்நாள் இரவுப் பணிக்கு திலீப் வரவில்லையாம். இதனால், அவரது வருகைப்பதிவேட்டில் ஆப்செண்ட் என ஜோசி குறித்துள்ளார். மறுநாள் பணிக்கு வந்த திலீப் இது தொடர்பாக ஜோசியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து இந்த துப்பாக்கிச் சூடு நடந்ததாக மும்பை கமிஷனர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மும்பை குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க!












Click it and Unblock the Notifications