பொது இடத்தில் ஆண் சுயஇன்பம் அனுபவித்த கொடுமை இந்த நடிகையின் வாழ்விலும் நடந்துள்ளது!
மும்பை: மும்பையில் ஒருவர் பெண் எழுத்தாளரை பார்த்து சுய இன்பம் அனுபவித்த சம்பவம் போன்று தனது வாழ்விலும் நடந்துள்ளதாக பாலிவுட் நடிகை ட்விங்கிள் கன்னா தெரிவித்துள்ளார்.
மும்பையில் வாலிபர் ஒருவர் பெண் எழுத்தாளரை பார்த்துக் கொண்டே பொது இடத்தில் சுய இன்பம் அனுபவித்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண் அவரை புகைப்படம் எடுத்து ட்விட்டரில் வெளியிட்டு நியாயம் கேட்டார். இதை பார்த்த மகாராஷ்டிரா மாநில முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் இது குறித்து உடனே நடவடிக்கை எடுக்குமாறு போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து போலீசார் அந்த நபரை தேடிப் பிடித்து கைது செய்தனர். இந்நிலையில் இது குறித்து பாலிவுட் நடிகையும், இந்தி நடிகர் அக்ஷய் குமாரின் மனைவியுமான ட்விங்கிள் கன்னா கூறுகையில்,
மும்பை சம்பவம் போன்று என் வாழ்விலும் நடந்துள்ளது. எனக்கு 12 வயது இருக்கையில் பள்ளியில் இருந்து மும்பையில் உள்ள ஹேங்கிங் கார்டனுக்கு கல்விச் சுற்றுலா சென்றோம். அப்போது இது போன்ற சம்பவம் நடந்தது என்றார்.












Click it and Unblock the Notifications