மும்பை போலீஸ் கமிஷனர் அகமது திடீர் மாற்றம் - புதிய அதிகாரியாக தத்தா பட்சல்கிகார் நியமனம்
மும்பையின் புதிய போலீஸ் கமிஷனராக காவல்துறை அதிகாரி தத்தா பட்சல்கிகார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் நாளை பதவியேற்க உள்ளார்.
தற்போது மும்பை போலீஸ் கமிஷனராக இருக்கும் அகமது ஜாவேத் மாற்றப்பட்டுள்ளதையட த்து புதிய போலீஸ் கமிஷனராக தத்தா பட்சல்கிகார் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே கடந்த வருடம் மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஷீனா போரா கொலைவழக்கு விசாரணை தீவிரமாக நடைபெற்று வரும் வேளையில், மும்பை மாநகர போலீஸ் கமிஷனர் பொறுப்பில் இருந்து ராகேஷ் ஷர்மா திடீரென மாற்றப்பட்டு இந்திய துணை ராணுவ படையின் மும்பை பொது இயக்குநராக நியமிக்கப்பட்டார்.
அவருக்கு பதிலாகவே துணை ராணுவ படையின் மும்பை பொது இயக்குநராக பதவி வகித்து வந்த அதிகாரியான அகமது ஜவேத் மும்பை மாநகரின் புதிய போலீஸ் கமிஷனராக நியமனம் செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் கடந்த 4 மாதங்களுக்குள் இன்று மீண்டும் அகமது மாற்றப்பட்டு அப்பதவிக்கு தத்தா பட்சல்கிகார் நியமிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.