திருடப்படும் வெங்காயம்… தங்கம் போல பாதுகாப்பு தரும் போலீஸ்

Subscribe to Oneindia Tamil

மும்பை: மும்பையில், காய்கறி மொத்த கடையில் நுழைந்து, 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள, 300 கிலோ வெங்காயத்தை திருடிச் சென்ற இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்திய உணவு வகைகளில், அத்தியாவசியமாக இடம்பெறும் வெங்காயத்தின் விலை, கிலோவுக்கு, 100 ரூபாய் என்ற அளவில், நாட்டின் முக்கிய நகரங்களில் விற்கப்படுகிறது.

இன்னும் விலை அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுவதால், விற்பனைக்கு வைத்திருக்கும் வெங்காயத்தை, மொத்த வியாபாரிகள் பதுக்கி, செயற்கையாக விலையேற்றத்தை உருவாக்கி வருவதாகக் கூறப்படுகிறது.

Mumbai police togive protection to Onions

இந்நிலையில், மும்பை, வாஷி பகுதியில், வெங்காயத்திற்கு ஏக கிராக்கி இருப்பதை அறிந்த திருடர்கள் இருவர், செவ்வாயன்று அதிகாலை, காய்கறி மொத்த கடைக்குள் நுழைந்து, அங்கு குளிர்பதன கிடங்கில் வைக்கப்பட்டிருந்த, ஆறு மூட்டைகளை திருடிச் சென்றனர்.இதை அறிந்த கடைக்காரர், போலீசில் புகார் கொடுத்தார். அதில், 'பிற, காய்கறிகள், பொருட்கள் அப்படியே இருக்கையில், 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வெங்காயத்தை மட்டும் காணவில்லை' என, தெரிவித்துஇருந்தார். போலீசார் மேற்கொண்ட விசாரணையில், தேவா மஜும்தார், 20, சலிம் சேஷக், 19, என்ற இருவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

வெங்காய விலை தொடர்ந்து அதிகரித்தால், தங்கத்திற்கு கொடுக்கப்படும் பாதுகாப்பு, வெங்காயத்திற்கும் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என, வியாபாரிகள் அஞ்சுகின்றனர்.
'வெங்காயத்தின் விலை இப்படியே உயர்ந்து சென்றால், வெங்காயம் விற்பனை செய்யும் கடைகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டி வந்தாலும் வந்து விடும் என, போலீசார் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+