For Daily Alerts
Just In
மும்பை மழையில் சிக்கி அந்தரத்தில் தொங்கும் பெண்.. வைரலாகும் பரிதாப போட்டோ!
மும்பை: மும்பையில் நேற்று பெய்த கனமழையால் நகரமே ஸ்தம்பித்து போனது. இந்த மழையில் சிக்கிய பெண்மணி ஒருவரின் படம் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.
மும்பையில் நேற்று வானம் பொத்துக் கொண்டு ஊற்றியதை போல மழை கொட்டியது. இதனால், நகரின் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன, மின்சாரம் துண்டிக்கப்பட்டது. கடல் அலைகள் கொந்தளித்தன.
இந்நிலையில், சாலையில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தில் இருந்து தப்பிப்பதற்காக பஸ் ஒன்றில் பெண் கஷ்டப்பட்டு ஏறி தொங்கிக்கொண்டிருக்கும் போட்டோ, டிவிட்டர், பேஸ்புக், வாட்ஸ்சப் போன்ற சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிவருகிறது.
ஏனெனில் அந்த ஒரு போட்டோ, மும்பையின் நிலையை உணர்த்த போதுமானதாக இருக்கிறது.
Comments
English summary
A woman's photo went viral after the heavy rain hit Mumbai on June 19.
Story first published: Saturday, June 20, 2015, 11:29 [IST]