இடுக்கி நிலச்சரிவு.. மூணாறில் தொடரும் சோகம்.. மேலும் 3 உடல்கள் மீட்பு.. பலி எண்ணிக்கை 53 ஆக உயர்வு!
இடுக்கி: மூணாறில் நிலச்சரிவு காரணமாக பலியானோர் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது.
கேரளாவில் இருக்கும் மூணாறு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் தொடர்ந்து பலி எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அங்கு இருக்கும் ராஜமலை பெட்டிமுடி கன்ணண் தேவன் டீ எஸ்டேட்டில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டு மொத்தமாக வழியில் இருந்த வீடுகளை மண் மூடியது.
மொத்தம் 20 வீடுகள் வழியில் இருந்தது. இந்த வீடுகள் எல்லாம் மொத்தமாக மணல் மூடியது. இதில் 83 பேர் வரை மணலுக்கு உள்ளே சிக்கி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

பலி எண்ணிக்கை
மூணாறில் நிலச்சரிவு காரணமாக பலியானோர் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 3உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் பலி எண்ணிக்கை உயர்ந்துள்ளது. மீட்கப்பட்ட 3 உடல்களும் ஆண் உடல்கள். இவர்கள் மூவரும் தமிழர்கள் என்று முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கிறது.

இன்னும் பலர்
இந்த பகுதியில் இன்னும் 19 உடல்கள் சிக்கி உள்ளது. இவர்கள் ஆழமான இடத்தில் சிக்கி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. கடந்த வெள்ளிக்கிழமையில் இருந்து இங்கு மீட்பு பணி நடக்கிறது. இருந்தும் கூட உடல்களை மீட்க முடியவில்லை. இதனால் பலி எண்ணிக்கை 70ஐ தாண்ட வாய்ப்புள்ளது என்று தகவல்கள் வருகிறது .

தமிழ் குடும்பம்
இந்த நிலச்சரிவில் தமிழர்கள் பலர் சிக்கி தவித்து வருகிறார்கள். இதுவரை 32 தமிழர்கள் இந்த நிலச்சரிவில் பலியாகி உள்ளனர். எல்லோரும் அங்கு தேயிலை தோட்ட பணிகளை செய்யும் மக்கள். அந்தப்பகுதியில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் பலர் தேயிலை தோட்ட தொழிலாளர்களாக இருக்கிறார்கள். அங்கேயே சிறிய சிறிய வீடுகளை கட்டி வசித்து வருகிறார்கள்.
Recommended Video

மரணம்
மலை முகடுகளில் இவர்கள் வீடுகளை கட்டி உள்ளனர். அங்கு தற்போது தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மீட்பு பணிகளை மேற்கொள்வது மிகவும் கடினமான காரியமாக மாறியுள்ளது. இரவு முழுக்க பெய்த மழையால், மீட்பு பகுதியில் சேறு மூடி, மீட்பு பணியை தாமதமாக்கி உள்ளது.












Click it and Unblock the Notifications