ஐஎஸ் அமைப்பை அழித்துவிடுங்கள்: ஐ.நா.வுக்கு இந்திய இமாம்கள் கோரிக்கை
மும்பை: 1,050 இந்திய இமாம்கள் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு பத்வா விட்டு அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூனை கேட்டுக் கொண்டுள்ளனர்.
இஸ்லாமிய கொள்கைகளுக்கு எதிராக செயல்படுவதாகக் கூறி இந்தியாவைச் சேர்ந்த 1,050 இமாம்கள், முப்திகள் மற்றும் அறிஞர்கள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு எதிராக பத்வா விட்டுள்ளனர். அந்த பத்வாவில் டெல்லி ஷாஹி இமாம் செய்யது அகமது புகாரி, அஜ்மீர் தர்காவின் தலைவர் உள்ளிட்டோர் கையெழுத்திட்டுள்ளனர்.

இது குறித்து மும்பை இஸ்லாமிய டிபென்ஸ் சைபர் செல்லின் தலைவர் அப்துல் ரஹ்மான் அஞ்சாரியா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுயிருப்பதாவது,
இஸ்லாம் வன்முறையை வெறுக்கிறது. ஆனால் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளோ வன்முறையை தூண்டிவிடுகிறார்கள். மத்திய கிழக்கு நாடுகளில் அழிவை ஏற்படுத்தியுள்ள ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பை அழிக்க சர்வதேச சமூகம் முன் வர வேண்டும். பத்வாவின் நகல் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் செயல்கள் இஸ்லாத்திற்கும், மனிதநேயத்திற்கும் எதிரானவை. அந்த தீவிரவாதிகள் உலக மக்கள் மத்தியில் இஸ்லாத்தை பற்றி தவறான கருத்தை ஏற்படுத்துகிறார்கள் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications