அயோத்தியில் ராமர் கோவில் கட்டுங்கள்...நான் நன்கொடை தருகிறேன் - சொல்வது சமாஜ்வாடி முஸ்லிம் தலைவர்!
லக்னோ: அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு முஸ்லிம் தலைவர் ஒருவர் ஆதரவு தெரிவித்திருக்கிறார். அவர் உத்தரபிரதேச மாநிலத்தில் ஆளுங்கட்சியாக உள்ள சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான புக்கால் நவாப் எம்.எல்.சி.
இதுபற்றி நேற்று அவர் அளித்த பேட்டியில், "நான் ஒரு முஸ்லிம். ஆனால் ராமரை நான் மதிக்கிறேன். அயோத்தியில் ராமருக்கு கோவில் கட்ட வேண்டும் என்று விரும்புகிறேன்" என கூறினார்.

மேலும், "அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி தொடங்கிய உடனேயே ரூபாய் 10 லட்சமும், ஒரு தங்க கிரீடமும் நன்கொடையாக வழங்குவேன்" என அறிவித்தார். அதே நேரத்தில் இது தனது தனிப்பட்ட கருத்து என்றும், கட்சிக்கும் இதற்கும் தொடர்பு இல்லை என்றும் கூறினார்.
ஆனால் இதை சமாஜ்வாடி கட்சி சாதாரணமாக எடுத்துக்கொண்டுள்ளது. இதுகுறித்து அந்த கட்சியின் பொதுச்செயலாளர் சிவபால்சிங் யாதவ் கருத்து தெரிவிக்கையில், "பிரச்சினைக்குரிய இடத்தை தவிர்த்து வேறு எங்கும் ராமர் கோவில் கட்டுவதை நாங்கள் ஆதரிக்கிறோம். பிரச்சினைக்குரிய இடத்தில் கோர்ட் உத்தரவு பெறாமல் ஒரு கல்லைக்கூட மாற்றக்கூடாது" என குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications