மெல்ல மெல்ல இயல்புநிலைக்கு திரும்பும் முசாபர்நகர்: ஊரடங்கு உத்தரவு 7 மணி நேரத்திற்கு தளர்வு
முசாபர்நகர்: கலவரத்தால் பாதிக்கப்பட்ட முசாபர்நகர் மாவட்டத்தில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு 7 மணிநேரம் மட்டும் தளர்த்தப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள கவல் கிராமத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 27ம் தேதி ஒரு பெண்ணை கிண்டல் செய்தது தொடர்பாக இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதலில் 3 பேர் பலியாகினர்.
இந்நிலையில் கவல் வன்முறை குறித்த வழக்குகளை வாபஸ் பெறக்கூறி நாகலாபாத்ஹோத்தில் ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்களின் மகாபஞ்சாயத்து கூட்டம் கடந்த சனிக்கிழமை நடந்தது. பஞ்சாயத்து முடிந்து அவர்கள் வீடுகளுக்கு திரும்புகையில் மற்றொரு சமூகத்தினர் அவர்களை தாக்கினர். இதனால் முசாபர்நகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு இந்த கலவரம் பரவியது. இதில் 38 பேர் பலியாகினர், 67 பேர் காயம் அடைந்தனர்.
இதையடுத்து முசாபர்நகர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பாதுகாப்பு பணியில் போலீசார், ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மெல்ல மெல்ல அமைதி திரும்பி வருகிறது. இந்நிலையில் முசாபர்நகர் மாவட்டத்தில் பகல் நேரத்தில் 7 மணிநேரத்திற்கு மட்டும் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது.

குத்பா
முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள குத்பா கிராமத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவத்தினர்.

எரிந்த வீடு
குத்பா கிராமத்தில் கலவரத்தின்போது எரிக்கப்பட்ட வீட்டுப் பக்கம் நடந்து செல்லும் ராணுவ வீரர்.

கவல்
கலவரம் துவங்கிய கவல் கிராமத்தில் சேர் போட்டு அமர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் போலீஸ்காரர்.

சச்சின்
கவல் கிராமத்தில் நடந்த கலவரத்தில் பலியான தங்கள் மகன் சச்சினின் புகைப்படத்தை காட்டும் வயதான பெற்றோர்.

பாதுகாப்பு
ஊரடங்கு உத்தரவு தளர்க்கப்பட்ட நேரத்தில் மக்கள் நடமாடும் பகுதிகளை கண்காணிக்கும் பாதுகாப்பு படையினர்.

கடை திறப்பு
ஊரடங்கு உத்தரவு தளர்க்கப்பட்ட நேரத்தில் கடையை திறந்து வைத்திருக்கும் வியாபாரிகள்.

காயம்
கலவரத்தில் காயமடைந்த சிறுமிகள் அஸ்ரா(11) மற்றும் அக்ஷா(5) முசாபர்நகர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மூதாட்டி
கலவரத்தில் காயமடைந்த 70 வயது ஷகுரான் முசாபர்நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முகாம்
கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த பெண்களும், குழந்தைகளும் முகாம் ஒன்றில் சாப்பிடுகின்றனர்.

கிராமத்தினர்
ஷாபூர் அருகே உள்ள கக்டாவில் கலவரத்தின்போது காயமடைந்த கிராமத்தினர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications