Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முசாஃபர்நகர் கலவரம்- உ.பி. அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: முசாஃபர் நகர் கலவரத்தின் போது பொது மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க உத்தரப்பிரதேச மாநில அரசு தவறிவிட்டதாக உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

உத்தரப்பிரதேசத்தின் முசாஃபர் நகரில் கடந்த ஆண்டு ஏற்பட்ட கலவரத்தில் 60 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தை மாநில அரசு தடுக்கவில்லை என்றும் நேர்மையான விசாரணை நடைபெறவில்லை எனவும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

Muzaffarnagar riots: UP government failed to protect rights, says Supreme Court

இந்த வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், முசாஃபர் நகர் கலவரத்தின் போது பொதுமக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க மாநில அரசு தவறிவிட்டது. கலவரத்தில் ஈடுபட்ட அனைவரையும் அரசியல் பாகுபாடின்றி கைது செய்ய வேண்டும் என்று தெரிவித்தது.

அத்துடன் இது தொடர்பாக எந்த ஒரு சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணையோ அல்லது சிபிஐ விசாரணையோ தேவையில்லை என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த கலவரத்தின் போது பலாத்காரத்துக்குள்ளாக்கப்பட்ட பெண்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் இதுபோன்ற கலவரங்களைக் கட்டுப்படுத்த நீண்டகால அடிப்படையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+