அமைதி திரும்பியது: கலவரம் பாதித்த முசாபர்நகரில் ஊரடங்கு உத்தரவு நீக்கம்
முசாபர்நகர்: கலவரத்தால் பாதிக்கப்பட்ட முசாபர்நகர் மாவட்டத்தில் விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 27ம் தேதி உத்தர பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டம் கன்வல் கிராமத்தில் பெண்ணை கிண்டல் செய்து தொடர்பாக 3 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கலவரம் வெடித்ததில் 47 பேர் பலியாகினர். கலவரம் வெடித்ததையடுத்து மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பாதுகாப்பு பணியில் ராணுவம் ஈடுபடுத்தப்பட்டது.
ஊடரங்கு உத்தரவுக்கு பிறகு புதிதாக வன்முறை சம்பவங்கள் நடக்காததால் அந்த உத்தரவு கடந்த வாரம் பகல் நேரத்தில் மட்டும் தளர்த்தப்பட்டது. இந்நிலையில் கலவரம் பாதித்த பகுதிகளை பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் துணை தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் நேற்று நேரில் பார்வையிட்டு மக்களுக்கு ஆறுதல் கூறினர்.

மாவட்டத்தில் அமைதி திரும்பியதையடுத்து நேற்று மாலை ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டது. முன்னதாக கலவரத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் அளிக்கப்படும் என்று பிரதமரும், ரூ. 10 லட்சம் அளிக்கப்படும் என்று உத்தர பிரதேச மாநில முதல்வர் அகிலேஷ் யாதவும் அறிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications